உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com
Showing posts with label தாமிரபரணி. Show all posts
Showing posts with label தாமிரபரணி. Show all posts

Saturday, June 5, 2010

தாமிரபரணி - தாலியே தேவ இல்ல

தாலியே தேவ இல்ல
நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி
உறவோடு பிறந்தது பிறந்தது
உசுரோடு கலந்தது கலந்தது
மாமா மாமா நீதான் நீதானே

அடி சிறுக்கி
நீதான் என் மனசுக்குள்ளெ
அட கிருக்கி
நீதான் என் உசுருக்குள்ளெ
உன்ன நெனச்சு
நான் நடந்தேன் என் ஊருக்குள்ளெ
என்ன உருக்கி

தாலியே தேவ இல்ல
நான் தான் உன் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரி பாதி
ஆஹ் ஆஹ்...

ஆஹ் ஆஹ்...

பத்து பவுனு பொன் எடுத்து
கங்கு குள்ள காய வெச்சு
தாலி ஒன்னு செய்ய போறேன்
மானே மானே
நட்ட நடு நெத்தியிலெ
ரத்த நெர பொட்டுவெச்சு
உன் கை புடிச்சு ஊருக்குள்ளெ
போவேன் நானே
அடி ஆத்தி
அடி ஆத்தி
மனசுல மனசுல மயக்கம்
இது என்ன
இது என்ன
கனவுல கனவுல கொழப்பம்
இது காதல் இல்ல
அதுக்கும் மேலதான்
அட கிருக்க
நான் உனக்காக பொறந்தவடா
அட கிருக்க
நான் உனக்காக அலைஞ்சவடா
உன்ன நெனச்சு
ஆஹ் ஒஹ்..
ஆஹ் ஒஹ்..

தாலியே தேவ இல்ல
நீதான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி
ஆஹ் ஆஹ்...

எட்டு ஊரு சந்தையில
எம்பது பேர் பாக்கையில
உன்ன கட்டி புடிச்சு கடிக்கபோறேன்
நானே நானே
ஹே குற்றவியல் நீதிமன்ற
கூண்டுகுள்ளெ நிக்கவெச்சு
கேசு ஒன்னு போட்டுருவேன்
மானே மானே
அடி ஆத்தி
அடி ஆத்தி
எனக்கிப்போ பிடிக்கிது உன்ன
இது என்ன
இது என்ன
நான் எத்தன தடவ சொன்னேன்
இது காதல் இல்ல
அதுக்கும் மேலதான் ஹோ..
அடி சிருக்கி
நீ தாய் மாமன் சீதனமே
உன்ன நெனச்சு
நான் முழுசாக தேயணுமே
என்ன உருக்கி
ஒஹ் ஹோ...

தாலியே தேவ இல்ல
நாந்தான் உன் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல
நீதான் என் சரிபாதி