உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com
Showing posts with label மெல்ல திறந்தது கதவு. Show all posts
Showing posts with label மெல்ல திறந்தது கதவு. Show all posts

Sunday, June 6, 2010

மெல்ல திறந்தது கதவு - குழலூதும் கண்ணனுக்குக்

குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ

குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்கக் குழலோச போட்டி போடுதா
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு

குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
---
மலைக்காத்து வீசுரபோது மல்லிகைப்பூ பாடாதா
மழமேகம் கூடுறபோது வண்ண மயில் ஆடாதா
மலைக்காத்து வீசுரபோது மல்லிகைப்பூ பாடாதா
மழமேகம் கூடுறபோது வண்ண மயில் ஆடாதா
என் மேனி தேனரும்பு என் பாட்டு பூங்கரும்பு
மச்சான் நான் மெட்டெடுப்பேன்
உன்ன தான் கட்டிவைப்பேன்
சுகமாக தாளம் தட்டி பாடட்டுமா
உனக்காச்சு எனக்காச்சு சரிஜோடி நானாச்சு கேளைய்யா
---
குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்கக் குழலோச போட்டி போடுதா
---
கண்ணா உன் வாலிப நெஞ்ச என் பாட்டு உசுப்புரதா
கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குரதா
கண்ணா உன் வாலிப நெஞ்ச என் பாட்டு உசுப்புரதா
கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குரதா
வந்தாச்சு சித்திரைதான் போயாச்சு நித்திரைதான்
பூவான பொண்ணுக்குத்தான்
ராவானா வேகுறதான்
மெதுவாகத் தூது சொல்லிப் பாடட்டுமா
வெளக்கேத்தும் பொழுதானா இளனெஞ்சு படும் பாடு கேளைய்யா
---
குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்கக் குழலோச போட்டி போடுதா
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு

குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ

மெல்ல திறந்தது கதவு - தேடும் கண் பார்வை

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...

தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு...

தேடும் கண் பார்வை தவிக்க...துடிக்க...
--
காண வேண்டும் சீக்கிரம்...என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ...என் ஆசை காவியம்

வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...

கனிவாய்...மலரே...

உயிர் வாடும் போது ஊடல் என்ன
பாவம் அல்லவா...
---
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
---
தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ

காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே...
நீ காணலாம் இன்னாளிலே என் மேனி வண்ணமே

பிரிந்தோம்... இணைவோம்...

இனி நீயும் நானும் வாழ வேண்டும்
வாசல் தேடி வா...
---
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
வெறும் மாயமாகுமோ...

தேடும் கண் பார்வை தவிக்க...
துடிக்க...

மெல்ல திறந்தது கதவு - வா வென்னிலா

வா வென்னிலா உன்னை தானே வானம் தேடுதே...
வா வென்னிலா உன்னை தானே வானம் தேடுதே...

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்...
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்...

வா வென்னிலா உன்னை தானே வானம் தேடுதே...
வா வென்னிலா உன்னை தானே வானம் தேடுதே...
---
முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்...
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்..
ஒரு முறையெனும்...திருமுகம் காணும்..
வரம் தர வேண்டும்....எனக்கது போதும்..

உனை சேர...
உனை சேர எதிர் பார்த்தேன் ..
முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்..
---
வா வென்னிலா உன்னை தானே வானம் தேடுதே...
வா வென்னிலா உன்னை தானே வானம் தேடுதே...

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்...
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்...

வா வென்னிலா உன்னை தானே வானம் தேடுதே...
வா வென்னிலா உன்னை தானே வானம் தேடுதே...
---
மலர் போன்ற பாதம் ..நடக்கின்ற போது..
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்..
இடையினில் ஆடும்....உடையென நானும்..
இணை பிரியாமல்...உடன் வர வேண்டும்..

உனக்காக...
உனக்காக பனி காற்றை ...
தினம் தூது போக வேண்டினேன்...
---
வா வென்னிலா உன்னை தானே வானம் தேடுதே...
வா வென்னிலா உன்னை தானே வானம் தேடுதே...

மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்...
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்...

வா வென்னிலா உன்னை தானே வானம் தேடுதே...
வா வென்னிலா உன்னை தானே வானம் தேடுதே...