உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Saturday, April 10, 2010

நான் கடவுள் - ஒரு காற்றில் அலையும்

ஒரு காற்றில் அலையும் சிறகு எந்த நேரம் ஓய்வு தேடும்
கண் இல்லாது காணூம் கனவு எதை தேடி எங்கு போகும்
எங்கெங்கும் இன்பம் இருந்தும் உன் பங்கு போனதெங்கே
இது ஏன் என்று பதில் யார் சொல்லுவார்

ஒரு காற்றில் அலையும் சிறகு எந்த நேரம் ஓய்வு தேடும்
கண் இல்லாது காணூம் கனவு எதை தேடி எங்கு போகும்
-
யார்க்கும் போல் ஒரு அன்னை தந்தை உனக்கும் இருந்தது உண்டு
யார்க்கும் போல் ஒரு தேகம் தாகம் உனக்கும் வளர்ந்தது இங்கு
யார்க்கும் போலே விழிகள் இருந்தும் உலகமோ இருளில்
ஒளியை போலே ஓர் துளி கொண்டு சென்ற துன்பம் யார்க்கும் உண்டோ
-
ஒரு காற்றில் அலையும் சிறகு எந்த நேரம் ஓய்வு தேடும்
கண் இல்லாது காணூம் கனவு எதை தேடி எங்கு போகும்
-
வீதி என்றொரு வீடும் உண்டு உனக்கது சொந்தம் என்று
வானம் என்றொரு கூரை உண்டு விழிகளும் அறியாது
வேலி இல்லா சோலைக்காக வந்ததோர் காவல்
கண்கள் கொண்ட தெய்வமும் காவலையும் கொண்டு சென்றதேனோ
-
ஒரு காற்றில் அலையும் சிறகு எந்த நேரம் ஓய்வு தேடும்
கண் இல்லாது காணூம் கனவு எதை தேடி எங்கு போகும்
எங்கெங்கும் இன்பம் இருந்தும் உன் பங்கு போனதெங்கே
இது ஏன் என்று பதில் யார் சொல்லுவார்

ஒரு காற்றில் அலையும் சிறகு எந்த நேரம் ஓய்வு தேடும்
கண் இல்லாது காணூம் கனவு எதை தேடி எங்கு போகும்

No comments:

Post a Comment