உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Friday, June 11, 2010

ஆறு - பாக்காத என்ன

பாக்காத என்ன பாக்காத
குத்தும் பார்வையால என்ன பாக்காத
போகாத தள்ளி போகாத
என்ன விட்டு விட்டு தள்ளி தள்ளி போகாத
கொடுத்தத திருப்பி நீ கேட்க
காதலும் கடனும் இல்ல
கூட்டத்தில் நின்னு பாத்து கொள்ள
நடப்பதும் கூத்தும் இல்ல

பாக்காத என்ன பாக்காத
குத்தும் பார்வையால என்ன பாக்காத
போகாத தள்ளி போகாத
என்ன விட்டு விட்டு தள்ளி தள்ளி போகாத
---
வேணாம் வேணான்னு நான் இருந்தேன்
நீதானே என்ன இழுத்து விட்டே
போடி போடின்னு நான் தொரத்த
வம்புல நீதானே மாடிவிட்ட
நல்ல இருந்த என் மனச
நாறாக திருச்சுபுட்ட
கருப்பா இருந்த என் இரவ
கலர மாத்திபுட்ட
என்னுடன் நடந்த என் நிழல
தனியா நடக்க விட்ட
உள்ள இருந்த என் உசுர
வெளிய மிதக்க விட்ட
---
பாக்காத என்ன பாக்காத
குத்தும் பார்வையால என்ன பாக்காத
போகாத தள்ளி போகாத
என்ன விட்டு விட்டு தள்ளி தள்ளி போகாத
---
வேணாம் வேணான்னு நினைக்கலையே
நானும் உன்ன வெறுக்கலையே
காணோம் காணோன்னு நீ தேட
காதல் ஒன்னும் தொலையலையே
ஒன்ன இருந்த ஞாபகத்த
நெஞ்சோடு சேர்த்துவெச்சேன்
தனியா இருக்கும் வலிய மட்டும்
தனியா அனுபவிச்சேன்
பறவையின் சிறகுகள் பிரிஞ்சாதான்
வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால் தான் இருவருக்கும்
காதல் அதிகரிக்கும்
---
பாக்காத என்ன பாக்காத
குத்தும் பார்வையால என்ன பாக்காத
போகாத தள்ளி போகாத
என்ன விட்டு விட்டு தள்ளி தள்ளி போகாத
கொடுத்தத திருப்பி நான் கேட்க
கடனா கொடுக்கலையே
உனக்குள்ளே தானே நான் இருக்கேன்
உனக்கு அது புரியலையே

சந்திரமுகி - அத்திந்தோம் திந்தியும்

அத்திந்தோம்..... திந்தியும் தோந்தன..... திந்தாதி நொம்தோம்.......
தகதிதோம்.....திந்தியும் தோந்தன..... திந்தாதி தொம்தோம்.......

அத்திந்தோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்
தகதிதோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்

ஆடாதா சவ்வாது மலை ஆடிடும் பொம்மி
ஆண்டவன தாலாட்டும் இசை கேளடி பொம்மி
என் பாட்டு வந்தாலே மனம் துள்ளிடும் பொம்மி
அவன் பாட்டு இல்லாத இடம் எங்கடி பொம்மி
முக்கண்ணு முத்தாக தந்த பாட்டு படிச்சேன்
பாட்டாலே பலகோடி நெஞ்சை நானும் புடிச்சேன்

அத்திந்தோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்
தகதிதோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்
திந்தாதி நொம்தோம்.....திந்தாதி நொம்தோம்

ஹே பொம்மி ஹே பொம்மி
---
வட்ட வட்ட மோட்டுகளை
தட்ட தட்ட வந்ததம்மா நதி காத்து .....ஒ.......நதி காத்து
மொட்டு மொட்டு மெல்ல மெல்ல
மெட்டு மெட்டு தட்டுதம்மா ஸ்ருதி பார்த்து ஸ்ருதி பார்த்து
ஹே.....
ஆட வைக்கணும் பாட்டு
சும்மா அசைய வைக்கணும் பாட்டு

கேட்க வைக்கணும் பாட்டு
நல்ல கிறங்க வைக்கணும் பாட்டு
இந்த பாட்டு சத்தம்
கேட்டு சுற்றும் பூமி எப்போதும்....ம்
---
அத்திந்தோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்
தகதிதோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்
---
சின்ன சின்ன தொட்டில் கட்டி
அம்மா சொல்லும் ஆரிராரோ இசை தானே.....ஒ..... இசை தானே
ஆணும் பெண்ணும் கட்டில் கட்டி
ஆசை மெட்டு கட்டுறதும் .....இசை தானே..ஒ..... இசை தானே
ஹே........ஆறு மனமே ஆறு .......
இங்கு அனைத்தும் அறிந்தது யாரு

அறிவை திறந்து பாரு
அதில் இல்லாததை சேரு
எல்லாம் தெரிஞ்ச எல்லாம்
அறிஞ்ச ஆளே இல்லையம்மா
---
அத்திந்தோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்
தகதிதோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்

ஆடாதா சவ்வாது மலை ஆடிடும் பொம்மி
ஆண்டவன தாலாட்டும் இசை கேளடி பொம்மி
என் பாட்டு வந்தாலே மனம் துள்ளிடும் பொம்மி
அவன் பாட்டு இல்லாத இடம் எங்கடி பொம்மி
முக்கண்ணு முத்தாக தந்த பாட்டு படிச்சேன்
பாட்டாலே பலகோடி நெஞ்சை நானும் புடிச்சேன்

அத்திந்தோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்
தகதிதோம் திந்தியும் தோந்தன திந்தாதி நொம்தோம்

சந்திரமுகி - கொஞ்ச நேரம்

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூரல் போடாதா

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூரல் போடாதா

கொஞ்சும் நேரம் கொஞ்சும் நேரம் எல்லை மீற கூடாதா
இந்த நேரம் இன்ப நேரம் இன்னும் கொஞ்சம் நீளாதா.....

கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாத
அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூரல் போடாதா
---
கண்ணில் ஓர் அழகு கையில் நூறு அழகு உன்னால் பூமி அழகே

உன்னில் நான் அழகு என்னில் நீ அழகு நம்மால் யாவும் அழகே

ஒ ஒ....கண்ணதாசன் பாடல் வரி போல கொண்ட காதல் வாழும் விழியாக
கம்பன் பாடிபோன தமில் போல எந்தனாளும் தேகம் நலமாக

வழி நீயாக....வயல் நானாக....வெல்லமை நீ
ஹா ஆ ஆ
---
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூரல் போடாதா
---
கொக்கி போடும் விழி கொத்தி போகும் இதழ் நித்தம் கோலம் இடுமா

மக்கள் யாவரையும் அன்பில் ஆளுகிற, உன்னை போல வருமா

வெளி வேசம் போட தெரியாமல் என்னதாசை கூடதடுமாறும்

ம் ஹும் ...பல கோடி பேரின் அபிமானம் உன்னகாக ஏங்கும் எதிர்காலம்

நீ என்னோடு நான் உன்னோடு...மெய் தானே.... இது
ஹா ஆ
---
கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேச கூடாதா
அந்த நேரம் அந்தி நேரம் அன்பு தூரல் போடாதா

கொஞ்சும் நேரம் கொஞ்சும் நேரம் எல்லை மீற கூடாதா
இந்த நேரம் இன்ப நேரம் இன்னும் கொஞ்சம் நீளாதா..

தாஸ் - சாமிகிட்ட சொல்லி புட்டேன்

சாமிகிட்ட சொல்லி புட்டேன்
உன்ன நெஞ்சில் வச்சி கிட்டேன்

ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலென்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்
சுத்தமா நீ நானும் பார்த்துக்கவே முடியலென்னு
கனவுக்குள்ள பார்த்துகிட்டோம் ....

சாமிகிட்ட சொல்லி புட்டேன்
உன்ன நெஞ்சில் வச்சு கிட்டேன்

ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலென்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்
சுத்தமா நீ நானும் பார்த்துக்கவே முடியலென்னு
கனவுக்குள்ள பார்த்துகிட்டோம் ..

ஒரு கோடி புள்ளி வச்ச
நான் போட்ட காதல் கோலம்
ஒரு பாதி முடியும் முன்னே
அழிச்சிரிச்சு காலம் காலம்
இன்னோரு ஜென்மம் நான் மறுபடி பொறந்து வந்து
உனக்காக காத்திருப்பேன் ...
அப்பவும் சேராமல் இருவரும் பிரியணுமுன..
பொறக்காமல் போயிடுவேன்......

சாமிகிட்ட.....அ சொல்லி புட்டேன்....
சாமிகிட்ட.....அ சொல்லி புட்டேன்....

சாமிகிட்ட சொல்லி புட்டேன்
உன்ன நெஞ்சில் வச்சு கிட்டேன்

ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலென்னு
மனசுக்குள்ளெ பேசிக்கிட்டோம்
சுத்தமா நீ நானும் பார்த்துக்கவே முடியலென்னு
கனவுக்குள்ளெ பார்த்துகிட்டோம் ..
---
தெப்ப குளத்தில் படிஞ்ச பாசி ...
கல்லெரிஞ்ச கலையும்... கலையும்
நெஞ்ச குளத்தில் படிஞ்ச காதல்
எந்த நெருப்பில் எரியும்... எரியும் !!
நீ போன பாத மேலே....
சருகாக கடந்த சுகமா ?
உன்னோட ஞாபகம் எல்லாம்
மனசுக்குள்ள இருக்கும் ரணமா ?
கட்டு காவல் மீறி வர
காதல் நெஞ்சு கெஞ்சுதே
---
சாமிகிட்ட சொல்லி புட்டேன்
உன்ன நெஞ்சில் வச்சு கிட்டேன்

ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலென்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்
சுத்தமா நீ நானும் பார்த்துக்கவே முடியலென்னு
கனவுக்குள்ள பார்த்துகிட்டோம் ..
---
மனசுக்குள்ள பூட்டி மறச்ச
அப்ப எதுக்கு வெளியில சிரிச்ச
கனவுக்குள்ள ஒடி புடிச்ச
நெசத்திலதான் தயங்கி நடிச்ச
ஆடி போடி பயிந்தாங்கோளி ....
எதுக்காக ஊமை ஜாட
நீ இருந்த மானச அள்ளி
எந்த தீயில் நானும் போட
உன்னை என்னை கேட்டுகிட்ட காதல் நெஞ்சை தட்டிச்சு ?
---

சாமிகிட்ட சொல்லி புட்டேன்
உன்ன நெஞ்சில் வச்சு கிட்டேன்

ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலென்னு
மனசுக்குள்ள பேசிக்கிட்டோம்
சுத்தமா நீ நானும் பார்த்துக்கவே முடியலென்னு
கனவுக்குள்ள பார்த்துகிட்டோம் ..

சாமிகிட்ட சொல்லி புட்டேன்
சாமிகிட்ட சொல்லி புட்டேன்..

கண்ட நாள் முதல் - மேற்கே மேற்கே

லை லை லை லை லை லை லை லாலகி லை

மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே

சுடும் வெய்யில் கோடை காலம்
கடும் பனி வாடை காலம்
இரண்டுக்கும் நடுவே ஏதும்
காலம் உள்ளதா?
இலை உதிர் காலம் தீர்ந்து
எழுந்திடும் மண்ணின் வாசம்
முதல் மழை காலம் என்றே
நெஞ்சம் சொல்லுதே

ஓ மின்னலும் மின்னலும்
நேற்று வரை பிரிந்தது ஏனோ
பின்னலாய் பின்னலாய்
இன்றுடன் பிணைந்திட தானோ
லை லை லை லை லை லால லை லை லை
மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே
---
ஓ கோபம் கொள்ளும் நேரம்
வானம் எல்லாம் மேகம்
காணாமலே போகும் ஒரே நிலா
ஓ கோபம் தீரும் நேரம்
மேகம் இல்லா வானம்
பௌர்ணமியாய் தோன்றும் அதே நிலா

இனி எதிரிகள் என்றே எவருமில்லை
பூக்களை விரும்பா வேர்களில்லை
நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே
இது நீரின் தோளில் கை போடும்
ஒரு சின்ன தீயின் கதையாகும்
திரைகள் இனிமேல் தேவை இல்லையே
---
மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே
லை லை லை லை லை லை லை லை லை லை லை...
---
வாசல் கதவை யாரோ
தட்டும் ஓசை கேட்டால்
நீதானென்று பார்தேனடி சகி
பெண்கள் கூட்டம் வந்தால்
எங்கே நீயும் என்றே
இப்பொதெல்லாம் தேடும் எந்தன் விழி

இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ
காற்றே சிறகாய் விரிந்திடுமோ
நிலவின் முதுகை தீண்டும் வேகமோ
அட,தேவைகள் இல்லை என்றாலும்
வாய் உதவிகள் கேடு மன்றாடும்
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ
---
மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே
லை லை லை லை லை லை லை லை லை லை லை...
ஓ மின்னலும் மின்னலும்
நேற்று வரை பிரிந்தது ஏனோ
பின்னலாய் பின்னலாய்
இன்றுடன் பிணைந்திட தானோ

கண்ட நாள் முதல் - உன் பனி துளி

கரு கரு கரு கரு
கண்ணு பட்டு ...
வாடிவிடும் வாசமல்லி
சந்தனதை பூசிவிடுங்க
அடுத்தது அடுத்தது ...
எப்போவென்னு மாமியாரு கேட்கும் முன்னே..?
அரை டஜன் பெத்து கொடுங்க....!!

தக தக தக தக
தங்க சிலை தவிக்குது
வெக்கதில போதும் அதை விட்டுவிடுங்க!!
ஆரிராரோ ஆரிராரோ --நாளைக்கினு
தேவைபடும் தாலாட்டுல
ஒன்னு ரெண்டு கத்துகொடுங்க...

உன் பனி துளி பனி துளி பனி துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ..?
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ..?
இது நனவாய் தோன்றும் கனவு
இது காலையில் தோன்றும் நிலவு
இது கண்ணை கண்ணை பரித்து
வெளிச்சம் தரும் இரவு

காதலா காதலா எண்ணவும் கூசுதே
ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே..

உன் பனி துளி பனி துளி பனி துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ..?
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ..?

கரு கரு கரு கரு
கண்ணு பட்டு ...
வாடிவிடும் வாசமல்லி
சந்தனதை பூசிவிடுங்க
அடுத்தது அடுத்தது ...
எப்போவென்னு மாமியாரு கேட்கும் முன்னே..?
அரை டஜன் பெத்து கொடுங்க....!!

தக தக தக தக
தங்க சிலை தவிக்குது
வெக்கதில போதும் அதை விட்டுவிடுங்க!!
ஆரிராரோ ஆரிராரோ --நாளைக்கினு
தேவைபடும் தாலாட்டுல
ஒன்னு ரெண்டு கத்துகொடுங்க...
---
விரல்களும் நகங்களும்
தொட்டு கொண்ட நேரங்கள்

எண்ணி அதை பார்த்ததில்லை
என்ற போதும் நூறுகள்

ஏதோ ஒரு தென்றல் மோதி
மெல்ல மெல்ல மாறினோம்

ஓ... உன்னை நானும் என்னை நீயும் எங்கே என்று தேடினோம்..?

நம்மை சுற்றி கூட்டம் வந்தும்...
தனியானோம்--
தனிமையில் நெஞ்சுக்குளே பேசலானோம்


பேசும் போதே --பேசும் போதே--
மௌனம் ஆனோம்!!
---
உன் பனி துளி பனி துளி பனி துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ..?
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ..?
---
முகத்திரைகுள்ளே நின்று..
கண்ணாம் பூச்சி ஆடினாய்..

பொய்யால் ஒரு மாலை கட்டி ..
பூசை செய்து சூடினாய்

நிழல்களின் உள்ளே உள்ள
நிஜங்களை தேடினேன்

நீயாய் அதை சொல்வாய்
என நித்தமும் நான் வாடினேன்

சொல்ல நினைத்தேன் ...ஆனால் வார்த்தை இல்லை
உன்னை விட்டால் யாரும் எந்தன் சொந்தம் இல்லை

சொந்தம் என்று யாரும் இனி தேவை இல்லை...
-
உன் பனி துளி பனி துளி பனி துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ..?
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ..?
இது நனவாய் தோன்றும் கனவு
இது காலையில் தோன்றும் நிலவு
இது கண்ணை கண்ணை பரித்து
வெளிச்சம் தரும் இரவு

காதலா காதலா எண்ணவும் கூசுதே
ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே..

உன் பனி துளி பனி துளி பனி துளி
என்னை சுடுவது சுடுவது ஏனோ..?
என் சூரியன் சூரியன் சூரியன்
அதில் உருகுது உருகுது ஏனோ..?

Thursday, June 10, 2010

ஒரு கல்லூரியின் கதை - காதல் என்பது

காதல் என்பது கடவுள் அல்லவா
அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா

காதல் என்றால் பொய்கள் அல்லவா
இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா

செல்ல பொய்களும் சுகங்கள் அல்லவா
இங்கு விழியின் வலிகளும் வரங்கள் அல்லவா

வரங்கள் என்பது மலைகள் அல்லவா
அது விழுந்து எழுவது துயரம் அல்லவா

காதல் என்பது கடவுள் அல்லவா
அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா

காதல் என்றால் பொய்கள் அல்லவா
இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா
---
கண்கள் மூடி படுத்தால் கனவில் உந்தன் பிம்பம்
காலை நேரம் எழுந்தால் நினைவில் உந்தன் சுகந்தம்
உனை பார்க்கும் முன்பு நானே வெட்ட வெளியிலே திரிந்தேன்
உன் அருகில் வந்ததால் வேடந்தாங்கலை உணர்ந்தேன்
உனக்காக தானே உயிர் வாழ்வேன் நானே
நீ இன்றி நானே வெரும் கூடு தானே
தாயோடு உணர்கின்ற வெப்பத்தை நீயே தந்தாய்
---
காதல் என்பது கடவுள் அல்லவா
அது கனவு தேசத்தின் கோவில் அல்லவா

காதல் என்றால் பொய்கள் அல்லவா
இரு விழிகள் வாங்கும் வலிகள் அல்லவா
---
காற்றில் ஆடும் கைகள் நெருங்கி நெருங்கி துரத்தும்
விரலை பிடித்து நடக்க விருப்பம் நெருப்பை கொடுக்கும்
உந்தன் அருகில் நானும் இருந்தால் நிமிடம் நொடிகள் என கரையும்
எனை விலகி நேரம் பிரிந்தால் நேரம் பாரமாய் கணக்கும்
உன் அருகில் இருந்தால் என்ன இனி வேண்டும்
உலகம் கையில் வந்ததாய் எண்ணம் ஒன்று தோன்றும்
தாயோடு உணர்கின்ற வெப்பத்தை நீயே தந்தாய்
---
காதல் வருவது புரிவது இல்லையே
அதை கடவுள் கூட தான் அறிவதில்லையே
பூக்கள் பூப்பது தெரிவதில்லையே
அதை யாரும் எங்குமே பார்த்ததில்லையே

காதல் வருவது புரிவது இல்லையே
அதை கடவுள் கூட தான் அறிவதில்லையே
பூக்கள் பூப்பது தெரிவதில்லையே
அதை யாரும் எங்குமே பார்த்ததில்லையே

ராம் - நிழலினை நிஜமும்

நிழலினை நிஜமும் பிரிந்திடுமா
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா
கருவரை உனக்கும் பாரமா அம்மா
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா

நிழலினை நிஜமும் பிரிந்திடுமா
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா
கருவரை உனக்கும் பாரமா அம்மா
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா
---
நடமாடும் சாவமா நான் இங்கே இருக்கேன்
விதி செய்த சதியா தெரியல்ல அம்மா
கரைதட்டும் அலையும் கடலில் தான் சேரும்
அது போல என்னையும் சேதுக்கம்மா
உன் பிள்ளை என்று ஊர் சொல்லும் போது
எனக்கே நான் யாரோ என்று ஆகி போனேன்
ஒத்த சொந்தம் நீ இருந்தால் போதும்மா
மொத்த பூமி எனக்கே தான் சொந்தம்மா
பத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமா
பூமிக்கு நான் வந்ததென்ன குத்தம்மா
---
திசை எல்லாம் எனக்கு இருளாகி கிடைக்கு
எங்கேயோ பயணம் தொடருதம்மா
என்னோட மனசும் பழுதாகி போச்சு
சரி செய்ய வழியும் தெரியல அம்மா
சூரியன் உடைஞ்ச பகல் இல்ல அம்மா
ஆகாயம் மறைஞ்ச அகிலமே சும்மா
என்ன சுத்தி என்னனமோ நடக்கு தம்மா
கண்டதெல்லாம் கனவாகி போயிடுமா
தூகத்தில்ல உன்னை நானும் தொலைச்சேன் அம்மா
தேடி தர தெய்வம் வந்து உதவிடுமா
---
நிழலினை நிஜமும் பிரிந்திடுமா
உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா
கருவரை உனக்கும் பாரமா அம்மா
மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா

ராம் - விடிகின்ற பொழுது

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா

விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா
---
உன்னாலே எனக்குள் உருவான உலகம்
பூகம்பம் இன்றி சிதறுதடா
எங்கேயோ இருந்து நீ தீண்டும் நினைவே
எனை இன்னும் வாழ சொல்லுதடா
தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்
தொட போகும் நேரம் மரணத்தின் வாசல்
காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடிச்சு
மெல்ல மெல்ல என்னை கொல்ல துணிஞ்சிடிச்சு
தீயில் என்னை நிக்க வச்சி சிரிக்கிறதே
தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதே
ஆஅ..
---
காற்று தீ போல கண்மூடி தனமாய்
என் சோகம் சுடர் விற்று எரியுதுடா
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்
வாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா
யாரிடம் உந்தன் கதை பேச முடியும்
வார்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்
பச்சை நிலம் பாலை வனம் ஆனதடா
பூவனமும் போர்க்களமாய் மாறுதடா
காலம் கூட கண்கள் மூடி கொண்டதடா
உன்னை விட கல்லரையே பக்கமடா
---
விடிகின்ற பொழுது தெரிந்திடுமா
கடலலை கரையை கடந்திடுமா
காதலை உலகம் அறிந்திடுமா
நினைப்பது எல்லாம் நடந்திடுமா

அறிந்தும் அறியாமலும் - கொஞ்சம் கொஞ்சம்

கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உனை பிடிச்சிருக்கா
ஏன் புரியவில்லை
கொஞ்சம் கொஞ்சம் எனக்குள் ஆசை இருக்கா
ஏன் புரியவில்லை

வெளியிலே மறைத்தேனே
விருப்பமாய் நினைத்தேனே
எனக்குள்ளே இரண்டானேன்
இது காதல் தானா புரியவில்லை

ஏ பெண்ணே உன்னை மறைக்காதே
மறைக்காதே உன்னை தொலைக்காதே ஓ..
ஏ நெஞ்சே உன்னை அழைக்காதே
அழைக்காதே உன்னை புதைக்காதே

கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உனை பிடிச்சிருக்கா
ஏன் புரியவில்லை
கொஞ்சம் கொஞ்சம் எனக்குள் ஆசை இருக்கா
ஏன் புரியவில்லை
---
இவன் இருளா இல்லை ஒளியா எனக்குள் குழப்பம்
புரியவில்லை
இவன் விரலா இல்லை நகமா சின்ன தயக்கம்
எனக்குள் இவன் மெல்ல இவனுக்குள் நான் மெல்ல
இது சரியா புரியவில்லை
காதல் வரவில்லை வந்துவிட வழியில்லை
வந்து விட்டதா புரியவில்லை
---
ஏ பெண்ணே உன்னை மறைக்காதே
மறைக்காதே உன்னை தொலைக்காதே ஓ..
ஏ நெஞ்சே உன்னை அழைக்காதே
அழைக்காதே உன்னை புதைக்காதே
--
எங்கோ இருந்தான் என்னுள் நுழைந்தான்
எப்படி புகுந்தான் புரியவில்லை
லேசாய் சிரித்தான் லேசாய் முறைத்தான் என்ன விடையோ
வழக்கம் போல் வருகிறான் வம்புகளும் புரிகிறான்
என்ன நினைப்பான் புரியவில்லை
நானே சொல்லிவிட்டால் நானே ஒப்புக்கொண்டால்
தவறில்லையா புரியவில்லை
---
ஏ பெண்ணே உன்னை மறைக்காதே
மறைக்காதே உன்னை தொலைக்காதே ஓ..
ஏ நெஞ்சே உன்னை அழைக்காதே
அழைக்காதே உன்னை புதைக்காதே

கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உனை பிடிச்சிருக்கா
ஏன் புரியவில்லை
கொஞ்சம் கொஞ்சம் எனக்குள் ஆசை இருக்கா
ஏன் புரியவில்லை
வெளியிலே மறைத்தேனே
விருப்பமாய் நினைத்தேனே
எனக்குள்ளே இரண்டானேன்
இது காதல் தானா புரியவில்லை

ஏ பெண்ணே உன்னை மறைக்காதே
மறைக்காதே உன்னை தொலைக்காதே ஓ..
ஏ நெஞ்சே உன்னை அழைக்காதே
அழைக்காதே உன்னை புதைக்காதே

மன்மதன் - மன்மதனே

மன்மதனே நீ கலைஞன் தான்
மன்மதனே நீ கவிஞன் தான்
மன்மதனே நீ காதலன் தான்
மன்மதனே நீ காவலன் தான்

என்னை உனக்குள்ளே தொலைத்தேன் ஏனோ தெரியலை
உன்னை கண்ட நொடி ஏனோ இன்னும் நகரல
உந்தன் ரசிகை நானும் உனக்கேன் புரியவில்லை

எத்தனை ஆண்கள் கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உன்னை போல் எவனும்
என்னையும் மயக்கவில்லை

எத்தனை ஆண்கள் கடந்து வந்தேன்
எவனையும் பிடிக்கவில்லை
இருபது வருடம் உன்னை போல் எவனும்
என்னையும் மயக்கவில்லை

மன்மதனே நீ கலைஞன் தான்
மன்மதனே நீ கவிஞன் தான்
மன்மதனே நீ காதலன் தான்
மன்மதனே நீ காவலன் தான்
---
நானும் ஓர் பெண்ணென
பிறந்த பலனை இன்றே தான் அடைந்தேன்
உன்னை நான் பார்த்த பின்
ஆண்கள் வர்க்கத்தை நானும் மதித்தேன்
எந்தன் நெஞ்சில் ஊஞ்சல் கட்டி ஆடி கொண்டே இருக்கிறாய்
எனக்குள் புகுந்து எங்கோ நீயும் ஓடி கொண்டே இருக்கிறாய்
அழகாய் நானும் மாறுகிறேன்,
அறிவாய் நானும் பேசுகிறேன்
சுகமாய் நானும் மலருகிறேன்
உனக்கேதும் தெரிகிறாதா?
---
ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிற என்ன விசித்திரமோ?
நண்பனே எனக்கு காதலன் ஆனால் அதுதான் சரித்திரமோ?

ஒரு முறை பார்த்தால் பல முறை இனிக்கிற என்ன விசித்திரமோ?
நண்பனே எனக்கு காதலன் ஆனால் அதுதான் சரித்திரமோ?

மன்மதனே உன்னை பார்க்கிறேன்
மன்மதனே உன்னை ரசிக்கிறேன்
மன்மதனே உன்னை ருசிக்கிறேன்
மன்மதனே உன்னில் வசிக்கிறேன்

உன்னை முழுதாக நானும் மென்று முழுங்கவோ
உந்தன் முன்னாடி மட்டும் வெட்கம் மறக்கவோ
எந்தன் படுக்கை அறைக்கு உந்தன் பெயரை வைக்கவோ

அடிமை சாசனம் எழுதி தருகிறேன், என்னை ஏற்று கொள்ள
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன், அன்பாய் பார்த்து கொள்ள
அடிமை சாசனம் எழுதி தருகிறேன், என்னை ஏற்று கொள்ள
ஆயுள் வரையில் உன்னுடன் இருப்பேன், அன்பாய் பார்த்து கொள்ள

மன்மதன் - காதல் வளர்தேன்...

காதல் வளர்தேன்...
காதல் வளர்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்தேன்

காதல் வளர்தேன்...
காதல் வளர்தேன்...
உசுருகுள்ள கூடு கட்டி
காதல் வளர்தேன்

ஏ... இதயதின் உள்ளே பெண்ணெ நான்
செடி ஒன்னு தான் வெச்சி வளர்தேன்
இன்றே அதில் பூவை நீ தான்
பூத்தவுடனே காதல் வளர்தேன்

ஏய் புள்ள புள்ள...
உன்னை எங்கே புடிச்சேன்...
ஏய் புள்ள புள்ள...
அத கண்டுபுடிச்சேன்
ஏய் புள்ள புள்ள...
உன்னை கண்ணில்புடிச்சேன்
ஏய் புள்ள புள்ள...
உன்னை நெஞ்சில் வெதச்சேன்
ஏய் புள்ள...

காதல் வளர்தேன்...
காதல் வளர்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்தேன்

காதல் வளர்தேன்...
காதல் வளர்தேன்...
உசுருகுள்ள கூடு கட்டி
காதல் வளர்தேன்
---
பூவின் முகவரி காற்று அறியுமே
என்னை உன் மனம் அறியாத...
பூட்டி வைத என் ஆசை மேகங்கள்
உன்னை பார்த்ததும் பொழியாதா...
பழ கோடி பெண்கள் தான்...
பூமியிலே வாழலாம்
ஒரு பார்வையால் மனதை
பரித்து சென்றவள் நீ அடி...
உனக்கெனவே காத்திருந்தாலே
கால் அடியில் வேர்கள் முளைக்கும்
காதலில் வலியும் இன்பம் தானே... மாஅனே...
உன்னது பெயரழுதி பக்கதில்லே
என்னது பெயரை நானும் எழுதி வெச்சேன்
அது மழையில் அழியாமல் கொடபுடிச்சேன்
மழை விட்டும் நான் நனைஞ்சேன்...
--
ஏய் புள்ள புள்ள...
உன்னை எங்கே புடிச்சேன்...
ஏய் புள்ள புள்ள...
அத கண்டுபுடிச்சேன்
ஏய் புள்ள புள்ள...
உன்னை கண்ணில்புடிச்சேன்
ஏய் புள்ள புள்ள...
உன்னை நெஞ்சில் வெதச்சேன்
ஏய் புள்ள...

காதல் வளர்தேன்...
காதல் வளர்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்தேன்

காதல் வளர்தேன்...
காதல் வளர்தேன்...
உசுருகுள்ள கூடு கட்டி
காதல் வளர்தேன்
---
உன்னை தவிர இங்கே எனக்கு யாரடி
உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்
உனது சுவாசத்தின் சூடுதீண்டினால்
மரணம் வந்தும் நான் உயிர் தெழுவேன்
உன் முகத்தை பார்க்கவே...
என் விழிகள் வாழுதே...
பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறேன் நான் அடி...
உடல் பொருள் ஆவி அனைத்தும்
உனக்கெனெவே தருவேன் பெண்ணே
உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே...கண்ணே...
தந்தை அன்பு அது பிறக்கும் வரை...
தாயின் அன்பு அது வளரும் வரை...
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ...
உயிரோடு வாழும் வரை...
அடியே ஏய் புள்ள புள்ள
---
காதல் வளர்தேன்...
காதல் வளர்தேன்...
உன்மேல் நானும் நானும் புள்ள
காதல் வளர்தேன்

காதல் வளர்தேன்...
காதல் வளர்தேன்...
உசுருகுள்ள கூடு கட்டி
காதல் வளர்தேன்

இதயத்தின் உள்ள பெண்ணே நான்
செடி ஒன்னு தான் வெச்சி வளர்தேன்
இன்றே அதில் பூவை நீ தான்
பூத்தவுடனே காதல் வளர்தேன்

ஏய் புள்ள புள்ள...
உன்னை எங்கே புடிச்சேன்...
ஏய் புள்ள புள்ள...
அத கண்டுபுடிச்ச
ஏய் புள்ள புள்ள...
உன்னை கண்ணில்புடிச்ச
ஏய் புள்ள புள்ள...
உன்னை நெஞ்சில் வெதச்ச
ஏய் புள்ள...

காதல் - தொட்டு தொட்டு

எங்கே நான் போனாலும் என் வாழ்வில் என்றும்
உன் நிழலில் இளைபாற வருவேன் கண்ணே
மரணம் தான் வந்தாலும் பூச்செண்டு தந்து
உன் மடியில் தலை சாய்ந்து இறப்பேன் பெண்ணே
பெண்ணே பெண்ணே பெண்ணே

தொட்டு தொட்டு என்னை
வெற்றுகளி மண்ணை
சிற்பமாக யார் செய்ததோ
சிற்பமாக யார் செய்ததோ

தொட்டு தொட்டு என்னை
பட்டாம்பூச்சி பெண்ணை
திட்டமிட்டு யார்வென்றதோ
திட்டமிட்டு யார்வென்றதோ

விழியில் விழுந்து வழியினை மறக்கிறேன்
உன்னக்குள் தொலைந்து உயிரோடு கலக்கிறேன்

தொட்டு தொட்டு என்னை
வெற்றுகளி மண்ணை
சிற்பமாக யார் செய்ததோ
சிற்பமாக யார் செய்ததோ

தொட்டு தொட்டு என்னை
பட்டாம்பூச்சி பெண்ணை
திட்டமிட்டு யார்வென்றதோ
திட்டமிட்டு யார்வென்றதோ
---
தாயுடன் பேசும் வார்தைகள் எல்லாம்
உடனே மறக்கும்
உன்னுடன் பேசும் வார்தைகள் எல்லாம்
உள்ளே நிலைக்கும்

முதல் முறை உன்னை பார்த்தது
எங்கே மனதும் தேடும்
மழை நின்ற பின்னும் மரக்கிளை
இங்கே மெதுவாய் தூரும்

இதயத்தின் உள்ளே இமயத்தை போலே
சுமைகளை வைத்தால்...காதல்

உலகத்தில் உள்ள சித்ரவதைக்கெல்லாம்
செல்ல பெயர் வைத்தால்...காதல்
--
எங்கே நான் போனாலும் என் வாழ்வில் என்றும்
உன் நிழலில் இலைபாற வருவேன் கண்ணே
மரணம் தான் வந்தாலும் பூச்செண்டு தந்து
உன் மடியில் தலை சாய்ந்து இறப்பேன் பெண்ணே
---
கரு விழி ரெண்டும் கருவரைதனோ
மீண்டும் பிறந்தேன்
கங்காருவை போலே நெஞ்சுகுள்ளே நானே
உன்னை சுமந்தேன்

உன்னை போலே யாரும் என்னை தாண்டி போனால்
உன்னை நினைப்பேன்
உந்தன் ஆசை முகம் பார்த்து கிடக்கதான்
உயிரை சுமப்பேன்

நெருங்கவும் இல்லை
விலகவும் இல்லை
நெஞ்சம் செய்யும் தொல்லை...காதல் காதல் காதல்

தொடக்கவும் இல்லை
முடிவுகள் இல்லை
கடவுளை போலே...காதல்
--
தொட்டு தொட்டு உன்னை வெற்றுகளிமண்ணை
சிற்பமாக யார் செய்ததோ

தொட்டு தொட்டு உன்னை
பட்டாம்பூச்சி பெண்ணை
திட்டமிட்டு யார்வென்றதோ

விழியில் விழுந்து வழியினை மறக்கிறேன்
உனக்குள் தொலைந்து....உயிரோடு கலக்கிறேன்

தொட்டு தொட்டு உன்னை
வெற்றுகளிமண்ணை
சிற்பமாக யார் செய்ததோ

தொட்டு தொட்டு உன்னை
பட்டாம்பூச்சி பெண்ணை
திட்டமிட்டு யார்வென்றதோ

உள்ளம் கேட்குமே - என்னை பந்தாட

என்னை பந்தாட பிறந்தவளே
இதயம் ரெண்டாக பிளந்தவளே
ஓசை இல்லாமல் மலர்ந்தவளே
உயிரை கண் கொண்டு கடைந்தவளே
உன்னை கண்ட பின் இந்த மண்ணை நேசித்தேன்
காலம் யாவும் காதல் கொள்ள வாராயோ

என்னை பந்தாட பிறந்தவளே
இதயம் ரெண்டாக பிளந்தவளே
ஓசை இல்லாமல் மலர்ந்தவளே
உயிரை கண் கொண்டு கடைந்தவளே
---
செங்குயிலே சிறு வெயிலே
மண்ணில் உள்ள வளம் இன்ன தின்னதென
செயற்கை கோள் அறியும் பெண்ணே
உன்னில் உள்ள வளம் என்ன தென்னதென
உள்ளங்கை அறியும் கண்ணே
நீ அழகின் மொத்தம் என்று சொல்லி
அந்த பிரம்மன் வைத்த முற்று புள்ளி
செங்குயிலே... சிறு வெயிலே...
வாய் திறந்து கேட்டுவிட்டேன்
வாழ்வை வாழ விடு அன்பே
--
இனியவனே இணையவனே
உன்னை காணவில்லை என்னும் போது
நெஞ்சில் சின்ன பைத்தியங்கள் பிடிக்கும்
பஞ்சு மெத்தைகளில் தூக்கம் இல்லை என்று
பற்கள் தலையணையை கடிக்கும்
உன்னை தொட்டு பார்க்க மனம் துடிக்கும்
நெஞ்சில் விட்டு விட்டு வெடி வெடிக்கும்
சின்னவனே... என்னவனே...
மூக்கு மீது மூக்கு வைத்து
நெற்றி முட்டிவிட வாடா
---
என்னை கொண்டாட பிறந்தவனே
இதயம் ரெண்டாக பிளந்தவனே
ஓசை இல்லாமல் மலர்ந்தவனே
உயிரை கண் கொண்டு கடைந்தவனே
உன்னை கண்ட பின் இந்த மண்ணை நேசித்தேன்
காலம் யாவும் காதல் கொள்ள வாராயோ அன்பே

உள்ளம் கேட்குமே - மழை மழை

யார் வந்தது யார் வந்தது
உன் நெஞ்சிலே யார் வந்தது
போர் வந்தது போல் வந்தது
உள் நெஞ்சிலே போர் வந்தது
பூ வந்தது பூ வந்தது
கை வீசிடும் பூ வந்தது
தீ வந்தது தீ வந்தது
பூ கண்களில் தீ வந்தது
ஏன் வந்தது ஏன் வந்தது
கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்
பெண் வந்ததும் பெண் வந்ததும்
உன் சூழலில் சத்தம் சத்தம்

மழை மழை
என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை
என்ன திண்மை என்ன வன்மை
எந்த பெண்ணும் அதிசய விண்கலம்
போக போக புரிகின்ற போர்களம்
ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய்

மழை மழை
என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை
எந்தன் மேனி உனக்கோரு தேன் குளம்
நீந்த நீந்த நிறைகின்ற நீர் வளம்
ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய்

யார் வந்தது யார் வந்தது
உன் நெஞ்சிலே யார் வந்தது
போர் வந்தது போல் வந்தது
உள் நெஞ்சிலே போர் வந்தது
பூ வந்தது பூ வந்தது
கை வீசிடும் பூ வந்தது
தீ வந்தது தீ வந்தது
பூ கண்களில் தீ வந்தது
ஏன் வந்தது ஏன் வந்தது
கண்ணோரமாய் வெப்பம் வெப்பம்
பெண் வந்ததும் பெண் வந்ததும்
உன் சூழலில் சத்தம் சத்தம்
---
நீ மட்டும் ம்ம் என்றால் உடலோடு உடல் மாற்றம் செய்வேனே
நீ மட்டும் போ என்றால் அப்போதே உயிர் விட்டு செல்வேனே
அடி பருவ பெண்ணே நீயும் ஒரு பங்கு சந்தை போலே
சில ஏற்ற இறக்கங்கள் அட உந்தன் மேனி மேலே
பூவின் உள்ளே ஒரு தாகம் உன் உதடுகள் தான்
---
மழை மழை
என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை
---
தீண்டாமல் சருகாகவேன் நீ வந்து தொட்டால் நான் சிறகாகவேன்
ஐயோடி நான் கல்லாவேன் உளியாக நீ வந்தால் கலையாவேன்
ஹே நீயும் ஓடி வந்து என்னை தீண்ட தீண்ட பாரு
ஒரு பாதரசம் போல நான் நழுவி செல்வேன் தேடு
ஏதோ ஏதோ வலி எந்தன் ஐம்புலங்களில் ஏன்?
---
மழை மழை
என் உலகத்தில் வருகின்ற
முதல் மழை நீ முதல் மழை
அலை அலை என் இதயத்தில் அடிக்கின்ற
முதல் அலை நீ முதல் அலை
எந்த பெண்ணும் அதிசய விண்கலம்
போக போக புரிகின்ற போர்களம்
ஒன்று செய் இப்போதே உள் நெஞ்சை உடைய செய்

உள்ளம் கேட்குமே - ஒ மனமே ஒ மனமே

ஒ மனமே ஒ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்?
ஒ மனமே ஒ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன்?
மழையை தானே யாசித்தோம்
கண்ணீர் துளிகளை தந்தது யார்?
பூக்கள் தானே யாசித்தோம்
கூளாங்கற்களை எறிந்தது யார்?

ஒ மனமே ஒ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்?
ஒ மனமே ஒ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன்?
---
மேகத்தை இழுது போர்வையாய் விரித்து
வானத்தில் உறங்கிட ஆசையடி
நம் ஆசை உடைத்து நார் நாராய் கிழித்து
முள்ளுக்குள் எரிந்தது காதலடி
கனவுக்குள்ளே காதலை தந்தாய்
கணுக்கள் தோறும் முத்தம்
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்
கைகள் முழுக்க ரத்தம்
துளைகள் இன்றி நாயநமா?
தோல்விகள் இன்றி பூரணமா?
---
ஒ மனமே ஒ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்?
ஒ மனமே ஒ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன்?
---
இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து
துன்பத்தில் முடிந்தவன் யாரும் இல்லை
இன்பம் பாதி துன்பம் பாதி
இரண்டும் வாழ்வின் அங்கம்
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்
நகையாய் மாறும் தங்கம்
தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி
வெற்றிக்கு அதுவே ஏணியடி
---
ஒ மனமே ஒ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்?
ஒ மனமே ஒ மனமே
சில்லு சில்லாய் உடைந்தது ஏன்?
மழையை தானே யாசித்தோம்
கண்ணீர் துளிகளை தந்தது யார்?
பூக்கள் தானே யாசித்தோம்
கூளாங்கற்களை எறிந்தது யார்?

ஒ மனமே ஒ மனமே
உள்ளிருந்து அழுவது ஏன்?
ஒ மனமே ஒ மனமே

சதுரங்கம் - எங்கே எங்கே

எங்கே எங்கே எங்கே என் வென்னிலவு
இங்கே இங்கே இங்கே ஏன் தொந்தரவு

எங்கே எங்கே எங்கே என் வென்னிலவு
இங்கே இங்கே இங்கே ஏன் தொந்தரவு
வீசும் தென்றல் உண்டு என்னை தீண்டவில்லை
வானவில்லும் உண்டு ஏனோ வண்ணம் இல்லை
எண்ணம் இங்கு உண்டு சொல்ல வார்தை இல்லை

ஏன் இந்த துன்பம் உன்னை காணவில்லை

எங்கே எங்கே எங்கே என் வென்னிலவு
இங்கே இங்கே இங்கே ஏன் தொந்தரவு
---
நீயா இன்பம் நீயே இன்பம்
நீயில்லாமல் எதுவும் துன்பம்
காதல் நம்மை சேதம் செய்தால்
யாரை நோவது

நீயா உண்மை நீயே உண்மை
நீயில்லாத உலகம் பொம்மை
காலம் நம்மை நோக செய்தால்
போதும் வாழ்வது

உதிராத ஞாபகம் ஒரு கோடி நீ தர
வரவான வேதனை செலவாகும் நீ வர

நான் மெல்ல நினைத்தேன் சொல்ல அழைத்தேன்
எங்கு தொலைத்தேன்
---
எங்கே எங்கே எங்கே என் வென்னிலவு
இங்கே இங்கே இங்கே ஏன் தொந்தரவு
---
காலை தந்தாய் மாலை தந்தாய்
காதல் பேசும் பொழுதும் தந்தாய்
வானம் தந்தாய் நீலம் தந்தாய்
யாவும் நீயடி

தூரல் தந்தாய் தூக்கம் தந்தாய்
தூர்ந்திடாத ஏக்கம் தந்தாய்
வாசம் தந்தாய் வாழ்வும் தந்தாய்
சுவாசம் நீயடி

அழகான பூமுகம் அகலாது காதலி
அணையாது கார்த்திகை துணையாகும் மார்கழி

நான் மெல்ல நினைத்தேன் சொல்ல அழைத்தேன்
எங்கு தொலைத்தேன்
---
எங்கே எங்கே எங்கே என் வென்னிலவு
இங்கே இங்கே இங்கே ஏன் தொந்தரவு

வீசும் தென்றல் உண்டு என்னை தீண்டவில்லை (தீண்டவில்லை)
வானவில்லும் உண்டு ஏனொ வண்ணம் இல்லை (வண்ணம் இல்லை )
எண்ணம் இங்கு உண்டு சொல்ல வார்தை இல்லை (வார்தை இல்லை )

ஏன் இந்த துன்பம்

சங்கமம் - வராக நதிக்கரை

ஓ...கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

கண்ணு தக்கு தக்கு தக்குங்குது...ஓஓஓ
உள்ள திக்கு திக்கு திக்குங்குது...ஓஓஓ
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது...ஓஓஓ
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே
---
பஞ்சவர்ணக்கிளி நீ பறந்த பின்னாலும் அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு
பஞ்சவர்ணக்கிளி நீ பறந்த பின்னாலும் அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு
பறந்துவந்து...ம்ம்ம்ம்ம்...விருந்து கொடு...ம்ம்ம்ம்ம்
மனசுக்குள்ள சடுகுடு சடுகுடு
மயக்கத்துக்கு மருந்தொன்னு குடு குடு
ஓஓஓ காவேரிக்கரையில் மரமாயிருந்தால் வேருக்கு யோகமடி
என் கை ரெண்டும் தாவணியானால் காதல் பழுக்குமடி
---
கண்ணு தக்கு தக்கு தக்குங்குது...ஓஓஓ
உள்ள திக்கு திக்கு திக்குங்குது...ஓஓஓ
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது...ஓஓஓ
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்
---
நீ என்னக் கடந்து போகயிலே உன் நிழல பிடிச்சுகிட்டேன்
நீ என்னக் கடந்து போகயிலே உன் நிழல பிடிச்சுகிட்டேன்
நிழலுக்குள்ள...ம்ம்ம்ம்ம்...குடியிருக்கேன்...ம்ம்ம்ம்ம்
ஒடம்பவிட்டு உசிர் மட்டும் தள்ளி நிக்க
கிழிஞ்ச நெஞ்ச எதக்கொண்டு நானும் தைக்க
ஓஓஓ ஒத்த விழிப்பார்வை ஊடுருவப் பார்த்து தாப்பா தெரிச்சிடுச்சு
தாப்பா தெரிச்சிடுச்சு
---
கண்ணு தக்கு தக்கு தக்குங்குது...ஓஓஓ
உள்ள திக்கு திக்கு திக்குங்குது...ஓஓஓ
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது...ஓஓஓ
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்சே

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

தானா தந்தனான தானனான
தானா தந்தனான தானனான
தானா தந்தனான தானனான
தானா தந்தனான தானனான

சங்கமம் - மழைத்துளி மழைத்துளி

மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்

மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்

ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க - என்ன
ஆடாம ஆட்டிவைச்ச வணக்கமுங்க
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமய்யா உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமய்யா உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்
நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும்
சபை ஆடிய பாதமிது நிக்காது ஒரு போதும்

ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க - என்ன
ஆடாம ஆட்டிவைச்ச வணக்கமுங்க

மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்

மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்

---
தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல
எனக்குள்ள நான் அழுதா துடைக்கவே எனக்கொரு நாதியில்ல
என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரம் ஆகுமே
சபதம் சபதம் என்றே சலங்கை சலங்கை சலங்கை பாடுமே
மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
விழியே விழியே இமையே தீயும்போதும் கலங்காதிரு

நதி நதி அத்தனையும் கடலில் சங்கமம்
நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்
கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்
---
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்

ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க - என்ன
ஆடாம ஆட்டிவைச்ச வணக்கமுங்க
---
மழைக்காகத்தான் மேகம் அட கலைக்காகத்தான் நீயும் - உயிர்
கலந்தாடுவோம் நாளும் மகனே வா..
நீ சொந்தக்காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு
இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா... மகனே வா...
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்
புலிகள் அழுவது ஏது அட பறவையும் அழ அறியாது
போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது
மகனே... மகனே...
காற்றுக்கு ஓய்வென்பதேது...அட ஏது
கலைக்கொரு தோல்வி கிடையாது...கிடையாது ..கிடையாது
---
ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க - என்ன
ஆடாம ஆட்டிவைச்ச வணக்கமுங்க
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமய்யா உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்
நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும்
நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும்
சபை ஆடிய பாதமிது நிக்காது ஒரு போதும்

மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்

மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்

மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்

மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்

இளமை ஊஞ்சல் ஆடுகிறது - என்னடி மீனாட்சி

வார்த்தை தவறி விட்டாய்.... கண்ணமா
மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்தில் எல்லாம் உன்னைபோல்
பாவை தெரியுது அடி

என்னடி மீனாட்சி - சொன்னது என்னாச்சு

என்னடி மீனாட்சி - சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு

என்னடி மீனாட்சி - சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு
---
உந்தன் உதட்டில் நிறைந்திருகும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்து இருக்கும் துளி விஷம்

உந்தன் உதட்டில் நிறைந்திருகும் பழரசம்
அந்த மனத்தில் மறைந்து இருக்கும் துளி விஷம்

நெஞ்சம் துடித்திடும் நாழி
நீயோ அடுத்தவன் தொழி
என்னை மறந்துபோவதும் நியாயமோ
இந்த காதல் ஒவியத்தின்
பாதை மாறியது
காலம் செய்துவிட்ட மாயமோ
ஒரு மனம் உருகுது
ஒரு மனம் விலகுது
ஏய்
---
என்னடி மீனாட்சி - சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயச்சு
---
அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கு ஒரு சிறுகதை

அன்பில் விளைந்த உறவு ஒரு தொடர்கதை
அந்த உறவு உனக்கு ஒரு சிறுகதை

கண்ணன் தனிமையிலே பாட
ராதை தன் வழியே ஓட
இந்த பிரிவை தங்குமோ என் மனம்
ஒரு நூலில் அடுகின்ற ஊஞ்சல் போன்றதடி
நாளும் மாறுகின்ற உன் மனம்
எனக்கு இன்று புரிந்தது
எவள் என்று தெரிந்தது
ஏய்
---
என்னடி மீனாட்சி - சொன்னது என்னாச்சு

என்னடி மீனாட்சி - சொன்னது என்னாச்சு
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு

வார்த்தை தவறி விட்டாய்.... கண்ணமா
மார்பு துடிக்குதடி

துள்ளுவதோ இளமை - இது காதலா

I think I'm in love with you
No no no no
well...I've been thinking about you
May be, I'm in love with you
I really don't know

இது காதலா முதல் காதலா
ஒரு பெண்ணிடம் உருவானதா
இது நிலைக்குமா நீடிக்குமா நெஞ்சே
உன் பார்வை உன் ஸ்பரிசத்தில்
உன் வாசத்தில் உன் கோபத்தில்
இதயத்தை தான் அபகரித்தாய்
காரணம் சொல் பெண்ணே

இது காதலா முதல் காதலா
ஒரு பெண்ணிடம் உருவானதா
இது நிலைக்கும நீடிக்கும நெஞ்சே
இரவு தூக்கம் தொலைந்ததே
ஒரு வித ஏக்கம் வந்ததே
வாழ்கை இங்கு தான் உன் கையிலே.......

புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள் பாயும் ரத்தம்
உறங்கும் போதே ஏதேதோ உளறல் சத்தம்
கனவுக்குள்ளே கண்ணாடி வளையல் யுத்தம்
என் கவிதை கிறுக்குகெல்லாமே நீ தான் அர்த்தம்
உயிர் கூந்தல் ஏறி ஓடி போனதே (போனதே போனதே..)
---
இது காதலா முதல் காதலா
இந்த வயதிலே வரும் மாற்றமா
குழம்புகிறேன் புலம்புகிறேன் உன்னாலே (உன்னாலே உன்னாலே உன்னாலே உன்னாலே )
என்ன பேசினேன் என்ன நினைக்கிறேன்
எங்கு போகிறேன் எது செய்கிறேன்
புரியவில்லை தெரியவில்லை புதை மணலாய் போனாயே
இனி வசந்தம் ஏதடி வாழ்வே வருத்தம் தானடி
காற்றில் அலைந்து நான் திரிகிறேன் ஏ
---
புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள் பாயும் ரத்தம்
உறங்கும் போதே ஏதேதோ உளறல் சத்தம்
கனவுக்குள்ளே கண்ணாடி வளையல் யுத்தம்
என் கவிதை கிறுக்குகெல்லாமே நீ தான் அர்த்தம்
உயிர் கூந்தல் ஏறி ஓடி போனதே

(புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள் பாயும் ரத்தம்
உறங்கும் போதே ஏதேதோ உளறல் சத்தம்
கனவுக்குள்ளே கண்ணாடி வளையல் யுத்தம்
என் கவிதை கிறுக்குகெல்லாமே நீ தான் அர்த்தம் )