உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Wednesday, March 31, 2010

பையா - அடடா மழைடா

அடடா மழைடா
அட மழைடா
அழகா சிரிச்சா
புயல் மழைடா
அடடா மழைடா
அட மழைடா
அழகா சிரிச்சா
புயல் மழைடா
மாரி மாரி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க
கால்கள் நாலாச்சு
கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு
ஏதேதோ ஆயாச்சு
மயில் தோக போல
இவ மழையில் ஆடும் போது
ரயில் பாலம் போல
என் மனசும் ஆடும் பாரு
என்னாச்சு ஏதாச்சு
ஏதேதோ ஆயாச்சு

அடடா மழைடா
அட மழைடா
அழகா சிரிச்சா
புயல் மழைடா

பாட்டு பாட்டு
பாடாத பாட்டு
மழை தான் பாடுது
கேட்காத பாட்டு
உன்னை என்னை சேர்த்து வெச்ச
மழைக்கொரு சலாம் போடு
என்னை கொஞ்சம் காணலயே
உனக்குள்ளே தேடி பாரு
மந்திரம் போல இருக்கு
புது தந்திரம் போல இருக்கு
பம்பரம் போல எனக்கு
தல மத்தியில் சுத்துது கிறுக்கு
தேவதை எங்கே
என் தேவதை எங்கே
அது சந்தோஷமா ஆடுது இங்கே

உன்னப்போல வேறாறும் இல்ல
என்னவிட்டா வேறாறு சொல்ல
சின்ன சின்ன கண்ணு ரெண்ட
கொடுத்தென்ன அனுப்பி வெச்சான்
இந்த கண்ணு போதலயே
எதுக்கிவள படைச்சி வெச்சான்
பட்டாம்பூச்சி பொண்ணு
நெஞ்சு படபடக்கும் நின்னு
பூவும் இவளும் ஒண்ணு
என்னை கொன்னுப்புட்டா கொன்னு
போவது எங்கே
நான் போவது எங்கே
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே

அடடா மழைடா
அட மழைடா
அழகா சிரிச்சா
அனல் மழைடா

அடடா மழைடா
அட மழைடா
அழகா சிரிச்சா
அனல் மழைடா

பின்னி பின்னி மழை அடிக்க
மின்னல் வந்து குடை பிடிக்க
வானம் ரெண்டாச்சு
பூமி துண்டாச்ச்சு
என் மூச்சு காத்தால
மழ கூட சூடாச்சு
குடையை நீட்டி யாரும்
இந்த மழையை தடுக்க வேணாம்
அணைய போட்டு யாரும்
என் மனச அடக்க வேணாம்
கொண்டாடு கொண்டாடு
கூத்தாடி கொண்டாடு

பையா - பூங்காற்றே பூங்காற்றே

பூங்காற்றே பூங்காற்றே
பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம்
சந்தோஷம் தந்தாள் இவள்

என் நெஞ்சோடு வீசும்
இந்த பெண்ணோட வாசம்
இவள் கண்ணோடு பூக்கும்
பல விண்மீன்கள் தேசம்

என் காதல் சொல்ல
ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே
இனி கனவே இல்லை

பூங்காற்றே பூங்காற்றே
பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம்
சந்தோஷம் தந்தாள் இவள்

மஞ்சள் வானம்
கொஞ்சம் மேகம்
கொஞ்சி பேசும் காற்று
தொட்டுச் செல்லுதே
நிறுத்தாமல்
சிரிக்கின்றேன்
இந்த நிமிடங்கள்
புன்னகையை கூட்டிக்கொண்டதே
கண்ணாடி சரி செய்து
பின்னாடி உன் கண்ணை
பார்க்கின்றேன் பார்க்கின்றேன்
பெண்ணே நான் உன் முன்னில்
ஒரு வார்த்தை பேசாமல்
தோற்கின்றேன் தோற்கின்றேன்
வழிபோக்கன் போனாலும்
வழியில் காலடி தடம் இருக்கும்
வாழ்க்கையிலே இந்த நொடி
வாசனையோடு நினைவிருக்கும்

பூங்காற்றே பூங்காற்றே
பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம்
சந்தோஷம் தந்தாள் இவள்

அழகான
நதி பார்த்தால்
அதன் பெயரினை கேட்க
மனம் துடிக்கும்
இவள் யாரோ
என்ன பேரோ
நானே அறிந்திடும் வரையில்
ஒரு மயக்கம்
ஏதேதோ ஊர் தாண்டி
ஏராளம் பேர் தாண்டி
போகின்றேன் போகின்றேன்
நில்லென்று சொல்கின்ற
நெடுங்சாலை விளக்காக
அலைகின்றேன் எரிகின்றேன்
மொழி தெரியா பாடலிலும்
அர்த்தங்கள் இன்று புரிகிறதே
வழி துணையாய் நீ வந்தாய்
போகும் தூரம் குறைகிறதே

என் நெஞ்சோடு வீசும்
இந்த பெண்ணோட வாசம்
இவள் கண்ணோடு பூக்கும்
பல விண்மீன்கள் தேசம்

என் காதல் சொல்ல
ஒரு வார்த்தை இல்லை
என் கண்ணுக்குள்ளே
இனி கனவே இல்லை

பூங்காற்றே பூங்காற்றே
பூப்போல வந்தாள் இவள்
போகின்ற வழி எல்லாம்
சந்தோஷம் தந்தாள் இவள்

பையா - சுத்துதே சுத்துதே பூமி

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி

ஹேய்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே
அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி
பழகிய ராதே
எதனாலே இந்த மாற்றம்
மனசுக்குள் ஏதோ மாய தோற்றம்
எதனாலே இந்த ஆட்டம்
இதயத்தில் இன்று ஊஞ்சல் ஆட்டம்

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி

ிரித்து சிரித்துதான்
பேசும் போதிலே
வலைகளை நீ விரிக்கிராய்
சைவம் என்றுதான்
சொல்லிக்கொண்டு நீ
கொலைகளை ஏன் செய்கிறாய்
அங்கும் இங்கும் என்னை விரட்டும் பறவையே
என்ன சொல்ல உந்தன் விரட்டும் அழகையே
வெட்ட வெளி நடுவே அட
கொட்ட கொட்ட
விழித்தே துடிக்கிறேன்

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி

சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி

இதயம் உருகிதான்
கரைந்து போவதை
பார்க்கிறேன்
நான் பார்க்கிறேன்
இந்த நிமிடம்தான்
இன்னும் தொடருமா
கேட்கிறேன்
உனை கேட்கிறேன்
இது என்ன இங்கு வசந்த காலமா
இடைவெளி இன்னும் குறைந்து போகுமா
இப்படி ஓர் இரவும்
அட இங்கு வந்த நினைவும்
மறக்குமா

ஹேய்
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
சுத்துதே சுத்துதே பூமி
இது போதுமட போதுமட சாமி
ரா ரா ரா ராதே ராதே ராதே
அழகிய ராதே
பார்வையில் பேசி பேசி பேசி
பழகிய ராதே
உன் அழகை
விண்ணில் இருந்து
எட்டி எட்டி நிலவு
பார்த்து ரசிக்கும்
உன் கொலுசில்
வந்து வசிக்க
குட்டி நட்சத்திரங்கள்
மண்ணில் குதிக்கும்

பசங்க - ஒரு வெட்கம் வருதே வருதே

ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலை பாயுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
போக சொல்லி கால்கள் தள்ள
நிற்க சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே
இனி இது தொடர்ந்திடுமே
இது தரும் தரும் தடுமாற்றம் சுகம்

மழை இன்று வருமா வருமா
குளிர் கொஞ்சம் தருமா தருமா
கனவென்னை களவாடுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
கேட்டு வாங்கி கொள்ளும் துன்பம்
கூறு போட்டு கொல்லும் இன்பம்
பர பர பரவெனவே
துடி துடித்திடும் மனமே
வர வர வர கரை தாண்டிடுமே

மேலும் சில முறை
உன் குறும்பிலே
நானே தோற்கிறேன்
உன் மடியிலே
என் தலையணை
இருந்தால் உறங்குவேன்
ஆணின் மனதிற்குள்ளும்
பெண்மை இருக்கிறதே
தூங்க வைத்திடவே
நெஞ்சம் துடிக்கிறது
ஒரு வரி நீ சொல்ல
ஒரு வரி நான் சொல்ல
எழுதிடும் காதல் காவியம்
அனைவரும் கேட்கும் நாள் வரும்

மழை இன்று வருமா வருமா
குளிர் கொஞ்சம் தருமா தருமா
கனவென்னை களவாடுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
கேட்டு வாங்கி கொள்ளும் துன்பம்
கூறு போட்டு கொல்லும் இன்பம்

இது முதல் அனுபவமே
இனி இது தொடர்ந்திடுமே
வர வர வர கரை தாண்டிடுமே


காற்றில் கலந்து நீ
என் முகத்திலே
ஏனோ மோதினாய்
பூ மரங்களில்
நீ இருப்பதால்
என் மேல் உதிர்கிறாய்
ஆ தூது அனுப்பிடவே
நேரம் எனக்கில்லையே
நினைத்த பொழுதினிலே
வரணும் எதிரினிலே
வெயிலினில் ஊர்கோலம்
இதுவரை நாம் போனோம்
நிகழ்கிறதே கார்காலமே
நனைந்திடுவோம் நாள் தோறுமே

ஒரு வெட்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலை பாயுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே
போக சொல்லி கால்கள் தள்ள
நிற்க சொல்லி நெஞ்சம் கிள்ள
இது முதல் அனுபவமே
துடி துடித்திடும் மனமே
வர வர வர கரை தாண்டிடுமே

சர்வம் - சிறகுகள் வந்தது

சிறகுகள் வந்தது
எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது
கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது
உன்னை காணவே


கனவுகள் பொங்குது
எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது
உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது
உன்னை தேடியே

உன்னை உன்னை
தாண்டி செல்ல
கொஞ்ச காலம்
கொஞ்ச தூரம்
கொஞ்ச நேரம்
கூட என்னால் ஆகுமோ

உன்னை உன்னை
தேடி தானே
இந்த ஏக்கம்
இந்த பாதை
இந்த பயணம்
இந்த வாழ்க்கை ஆனதோ

கனவுகள் பொங்குது
எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது
உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது
உன்னை தேடியே

நதியே நீ எங்கே என்று
கரைகள் தேட கூடாதா
நிலவே நீ எங்கே என்று
முகில்கள் தேட கூடாதா

மழை இரவினில் குயிலின் கீதம்
துடிப்பதை யார் அறிவார்
கடல் நடுவினில் மிதக்கும் படகின்
கனவுகள் யார் அறிவார்

அழகே நீ எங்கிருக்கிறாய்
வலித்தால் அன்பே அங்கிருக்கிறாய்
உயிரே நீ என்ன செய்கிறாய்
உயிரின் உள்ளே வந்து செல்கிறாய்

அன்பே எந்தன்
நெஞ்சம் இங்கே
பூவின் உள்ளே
நிழலின் மேலே
தீயின் கீழே
காற்றின் வெளியே
இல்லையே
உந்தன் கண்ணில்
உந்தன் மூச்சில்
உந்தன் நிழலில்
உந்தன் நெஞ்சில்
உந்தன் கையில்
உந்தன் உயிரில்
உள்ளாதே

எனக்கே நான்
சுமையாய் மாறி
என்னை சுமந்து வந்தனே
உனக்காய் நான்
நிழலாய் மாறி
உன்னை தேடி வந்தனே

விழி நனைந்திடும்
நேரம் பார்த்து
இமை விலகி விடாது
உயிர் துடித்திடும்
உன்னை எந்தன்
உயிர் ஒடுக்கி விடாது

உருவம் ஒரு புள்ளி ஆகுதே
நெஞ்சம் எங்கோ மிதந்து போகுதா
உயிரில் ஒரு பூ வெடிக்குதே
சுகமோ வலியோ எல்லை மீறுதே

சிறகுகள் வந்தது
எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது
கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது
உன்னை காணவே

ஒரு இமை எங்கிலும்
தேனில் மூழ்க
ஒரு இமை மாத்திரம்
வலியில் நோக
இடையினில் எப்படி
கனவும் காணுமோ


உன்னை உன்னை
தாண்டி செல்ல
கொஞ்ச காலம்
கொஞ்ச தூரம்
கொஞ்ச நேரம்
கூட என்னால் ஆகுமோ

உன்னை உன்னை
தேடி தானே
இந்த ஏக்கம்
இந்த பாதை
இந்த பயணம்
இந்த வாழ்க்கை ஆனதோ

சிவா மனசுல சக்தி - ஒரு கல்

ஒரு கல்
ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால்
காதல்

ஒரு சொல்
சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால்
காதல்

கண்கள் ரெண்டில்
காதல் வந்தால் ஹோ
கண்ணீர் மட்டும்
துணை ஆகுமே
ஒஹ் ஹோ ஹோ

ஒரு கல்
ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால்
காதல்

ஒரு சொல்
சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால்
காதல்

திமிருக்கு மறு பெயர் நீதானே
தினம் தினம் உன்னால் இறந்தேனே
மறந்திட மட்டும் மறந்தேனே

தீ என புரிந்தும் அடி நானே
திரும்பவும் உனை தொட வந்தேனே
தெரிந்தே சுகமாய் எரிந்தேனே

கடும் விஷத்தினை எடுத்து குடித்தாலும்
அடி கொஞ்ச நேரம் கழித்தே உயிர் போகும்
இந்த காதலிலே உடனே உயிர் போகும்
காதல் என்றால் பெண்ணே
சித்ரவதை தானே


ஒரு கல்
ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால்
காதல்

ஒரு சொல்
சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால்
காதல்


உன் முகம் பார்த்தே நான் எழுவேன்
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்
உன் நிழலுடனே நான் வருவேன்

புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்
புறக்கணித்தால் நான் என்னாவேன்
பெண்ணே எங்கே நான் போவேன்

உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை
அதை சொல்லிவிட்டால் தொடங்கும் என் வாழ்க்கை
உன் மௌனத்தில் இருக்கும் என்ன வலிகள்
காதல் என்றால் மெல்ல
சாதல் என்று சொல்ல


ஒரு கல்
ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால்
காதல்

ஒரு சொல்
சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால்
காதல்

கண்கள் ரெண்டில்
காதல் வந்தால்
கண்ணீர் மட்டும்
துணை ஆகுமே
ஒஹ் ஹோ ஹோ

ஒரு கல்
ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால்
காதல்

ஒரு சொல்
சில மௌனங்கள்
பேசாமல் பேசிக்கொண்டால்
காதல்

அறை எண் 305 -ல் கடவுள் - குறை ஒன்றும் இல்லை

குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

எல்லோருக்கும் சில நேரம் வரும் சோதனை
இருந்தாலும் கூடாது மன வேதனை

எல்லோருக்கும் சில நேரம் வரும் சோதனை
இருந்தாலும் கூடாது மன வேதனை

வெற்றி தோல்வி யாவும் நம் வாழ்கை பாடமே
தோல்வி காட்டும் ஞானம் புது வேதம் ஆகுமே
எது வந்த போதும் அதை ஏற்றுகொள்வாய்
இருள் கூட ஒளி வீசும் துணிந்தே செல்வாய்
எதற்கும் ஓர் நாள் உண்டு
எல்லோர்க்கும் வாழ்வுண்டு

மணிவண்ணா மலையப்பா
கோவிந்தா கோவிந்தா

குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கீழ்நோக்கி பிடித்தாலும் மேல்நோக்கியே
எரிகின்ற சுடர்போல எழவேண்டுமே

கீழ்நோக்கி பிடித்தாலும் மேல்நோக்கியே
எரிகின்ற சுடர்போல எழவேண்டுமே

மண்ணில் மூடினாலும் விதை மாய்ந்து போகுமோ
வலை விண்ணில் வீசினாலும் வான்மீன்கள் வீழுமோ
உழைப்பார்க்கு என்றும் இழப்பேதும் இல்லை
இழந்தாலும் அதை மீண்டும் பெறுவார் கண்ணா
தளராது புயல்போலே
வரலாறு படைப்பாரே

மணிவண்ணா மலையப்பா
கோவிந்தா கோவிந்தா

குறை ஒன்றும் இல்லை
மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

ஜெயம் கொண்டான் - நான் வரைந்து வைத்த சூரியன்

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே
என் தலை நனைத்த மழைதுளி அமுதம் ஆனதே
நான் இழுத்து விட்ட மூச்சிலே இசைக்கசிநதே

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே மலருகின்றதே

===

ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு
வெள்ளி கம்பி என்று ஆகியதே

கம்பன் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு
தங்க சிற்பமென்று மாறியதே

ஜன்னல் கம்பி உந்தன் கைகள் பட்டு பட்டு
வெள்ளி கம்பி என்று ஆகியதே

கம்பன் சக்கை உந்தன் கண்கள் தொட்டு தொட்டு
தங்க சிற்பமென்று மாறியதே

பூக்கும் புன்னகையாலே என் தோள்கள் ரெக்கைகள் ஆக
நாக்கு உன் பெயர் கூர என் நாள்கள் சக்கரை ஆக

தலைகீழ் தடுமாற்றம் தந்தாய்
என்னில் என் கால்களில்

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே

===

பள்ளி செல்லவில்லை பாடம் கேட்க வில்லை
அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன்

நல்ல முல்லை இல்லை நானும் கயல் இல்லை
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்

பள்ளி செல்லவில்லை பாடம் கேட்க வில்லை
அள்ளிக் கொள்ள மட்டும் நான் படித்தேன்

நல்ல முல்லை இல்லை நானும் கயல் இல்லை
உன்னை மட்டும் இங்கு நான் தொடுத்தேன்

ஊஞ்சல் கயிரு இல்லாமால் என் ஊமை மனது ஆடும்
தூங்க இடம் இல்லாமால் என் காதல் கனவை நாடும்

நொடியும் விலகாமல் கொஞ்சும்
கொஞ்ச தங்கும் நெஞ்சே

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே
நான் துரத்தி நின்ற காக்கைகள் மயில்கள் ஆனதே
என் தலை நனைத்த மழைதுளி அமுதம் ஆனதே
நான் இழுத்து விட்ட மூச்சிலே இசைக்கசிநதே

நான் வரைந்து வைத்த சூரியன் ஒளிருகின்றதே
நான் நடந்து சென்ற மணல் வெளி மலருகின்றதே

டிஷ்யூம் - நெஞ்சாங்கூட்டில்

ஹேய் !
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் - பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
கட்டி போட்டு காதல் செய்கிறாய் - முதுகில்
கட்டறெம்பு போலே உருகிறாய்
காதல் தானே இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிறுத்திவிட்டால்
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்
இன்னும் பூமுகம் மறக்கவில்லை

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் - பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்

ஹேய் !
விண்ணை துடைக்கின்ற முகிலை, வெள்ளி நிலவை,
மஞ்சள் நட்ஷத்திரத்தை..
என்னைத்தேடி மண்ணில் வரவழைத்து
உன்னை காதலிப்பதை உரைப்பேன்
இன்று பிறக்கின்ற பூவுக்கும், சிறு புல்லுக்கும்,
காதல் உரைத்துமுடிப்பேன்..
உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும்
இன்னும் சொல்லவில்லையே இல்லையே..
லட்சம் பல லட்சம் என்று
தாய்மொழியில் சொல்லிருக்க
ஒத்தச் சொல்லு சிக்கவில்லை எதனாலே ?
பந்திவெச்ச வீட்டுக்காரி பாத்திரத்தை கழுவிவிட்டு பட்டினியாய்
கிடப்பாளே அது போல...!!!

நெஞ்சாங்கூட்டில்..நெஞ்சாங்கூட்டில்..
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் - பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்


சின்ன சின்ன செல்ல குரும்பும், சீனி சிரிப்பும்,
என்னை சீரழிக்குதே..
விரு விருவென வளரும் பழம்
எந்தன் விரதங்களை வெல்லுதே
உன்னை கரம் பற்றி இழுத்து, வளை உடைத்து,
காதல் சொல்லிடச் சொல்லுதே..
வெக்கம் இரு பக்கம் மீசை முளைத்து என்னை
குத்தி குத்தியே கொல்லுதே..
காதல் எந்தன் வீதி வழி
கையை வீசி வந்த பின்னும்
கால் கடுக்க காத்துருக்கேன் எதனாலே ?
பிப்ரவரி மாதத்துக்கு நாளு ஒன்னு கூடி வர
அந்த நாளும் காத்திருக்கும் அது போல...!!!

நெஞ்சாங்கூட்டில்..நெஞ்சாங்கூட்டில்..
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் - பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்

காதல் தானே இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிருத்திவிட்டால்
னெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்
இன்னும் பூமுகம் மறக்கவில்லை

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் - பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் - பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்

நான் அவன் இல்லை - ஏன் எனக்கு மயக்கம்

ஏன் எனக்கு மயக்கம்
ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு

ஏன் எனக்கு வியர்வை
ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு

ஹேய்
இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இந்த சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில் வெட்கம் அளந்தேன்
பரந்தேன் ஒஹோ

நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன்
கலைந்தேன்

ஏன் எனக்கு மயக்கம்
ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு

ஏய் ஏய் ஏய்
ஏன் எனக்கு வியர்வை
ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு

=====

சம்மதமா சேலை போர்வை
போர்த்திக்கொன்று நீ தூங்க

சம்மதமா வெட்கம் கொண்டு
ஏக்கம் கூட்டிட

சம்மதமா என்னை உந்தன்
குந்தலுக்குள் குடியேத்த

சம்மதமா எனக்குள் வந்து
கூச்சம் மூட்டிட

கட்டிகொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்
உன்னை மட்டும் சாகும் பொது தேட சம்மதம்
உள்ளங்கையில் உன்னை தாங்கி வாழ சம்மதம்
உன்னை தோளில் சாய்த்து கொண்டு போக சம்மதம்

ஏன் எனக்கு மயக்கம்
ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு

ஏய் ஏய் ஏய்
ஏன் எனக்கு வியர்வை
ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு

=====

this is the way to go
this is ecstasy
this song is just away
glim and dream
feel is so
meant to be
yO ho
=====

காதல் எனும் பூங்கவனத்தில்
பட்டாம்பூச்சி ஆவோமா

பூக்கள் விட்டு பூக்கள் தாவி
முழ்கி போவோமா

காதல் எனும் கூண்டில் அடைந்து
ஆயுள் கைதி ஆவோமா

ஆசை குற்றம் நாளும் செய்து
சட்டம் மீராம்மா

லட்சம் மின்னல் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன்
காதல் கொண்ட பொது தன்னை நேரில் பார்க்கிறேன்
எந்த பெண்ணை காணும்போதும் உன்னை பார்க்கிறேன்
உன்னை காதல் செய்து காதல் செய்தே கொல்லப்போகிறேன்

=====

ஏன் எனக்கு மயக்கம்
ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு

ஏன் எனக்கு வியர்வை
ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு

ஹேய்
இந்த நொடி உனக்குள் விழுந்தேன்
இந்த சுகம் உன்னில் உணர்ந்தேன்
ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன் கலைந்தேன்

ஏன் எனக்கு மயக்கம்
ஏன் எனக்கு நடுக்கம்
ஏன் எனக்கு என்ன ஆச்சு

ஏய் ஏய் ஏய்
ஏன் எனக்கு வியர்வை
ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு

Tuesday, March 30, 2010

பையா - துளி துளி துளி மழையாய்

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே

பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்

செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா

அழகாய் மனதை பறித்துவிட்டாளே

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே

தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூ முகம் காணவே ஆயுள் தான் போதுமோ
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டு தான் பூக்களும் பூக்குமோ
நெற்றி மேலே
ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்
பார்வை ஆளை தூக்கும்
கன்னம் பார்த்தால்
முத்தங்களால் தீண்ட தோன்றும்
பாதம் ரெண்டும் பார்க்கும் போது
கொலுசாய் மாற தோன்றும்

அழகாய் மனதை பறித்துவிட்டாளே

செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா

சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன் தோல்களில் சாயுவேன்
பூமியில் விழுகிற வேளையில்
நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன் நெஞ்சிலே தாங்குவேன்
காணும்போதே
கண்ணால் என்னை கட்டி போட்டாள்
காயம் இன்றி வெட்டி போட்டாள்
உயிரை ஏதோ செய்தாள்
மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்
அங்கே வந்து ஒட்டுக்கேட்டாள்
கனவில் கூச்சல் போட்டாள்

அழகாய் மனதை பறித்துவிட்டாளே

செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே

பையா - என் காதல் சொல்ல

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி

உன் கையில் சேர ஏங்கவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி

உன் அழகாலே உன் அழகாலே
என் வெய்யில் காலம் அது மழை காலம்
உன் கனவாலே உன் கனவாலே
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்
ஹேய்..

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி

காற்றோடு கை வீசி நீ பேசினால்
எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலை வீசுதே
காதல் வந்தாலே கண்ணோடு தான்
கள்ளத்தனம் அங்கு குடி யேருமோ
கொஞ்சம் நடித்தேனடி
கொஞ்சம் துடித்தேனடி
இந்த விளையாட்டை ரசித்தேனடி

உன் விழியாலே உன் விழியாலே
என் வழி மாறும் கண் தடுமாறும்
அடி இது ஏதோ ஒரு புது ஏக்கம்
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்..ஹேய்..

ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி
அந்த நிமிடங்கள் நில்லட்டுமே
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி
எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே
யாரும் பார்க்காமல் எனை பார்க்கிறேன்
என்னை அறியாமல் உனை பார்க்கிறேன்
சிறு பிள்ளை என
எந்தன் இமைகள் அது
உன்னை கண்டாலே குதிக்கின்றதே

என் அதிகாலை என் அதிகாலை
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்
என் அந்தி மாலை என் அந்தி மாலை
உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்..
ஹேய்..

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி

உன் கையில் சேர ஏங்கவில்லை
உன் தோளில் சாய ஆசை இல்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி

பொல்லாதவன் - மின்னல்கள் கூத்தாடும்

மின்னல்கள் கூத்தாடும் மழை காலம்
வீதியில் எங்கெங்கும் குடை கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே
உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்கு பிடித்ததடி
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே
அய்யோ பைத்தியமே பிடித்ததடி

மின்னல்கள் கூத்தாடும் மழை காலம்
வீதியில் எங்கெங்கும் குடை கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக்காலம்
உடல் கொதித்ததே
உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்கு பிடித்ததடா
எடை குறைந்ததே தூக்கம் தொலைந்ததே
அய்யோ பைத்தியமே பிடித்ததடி

===

முதல்முறை என்கிற பூக்கள்
பறித்தது தோட்டத்திலே
தலையணை உரையின்
ஸ்வீட் ட்ரீம்ஸ் பலித்தது தூக்கதிலே
காலை தேனீர் குழம்ப மிதந்தது
சோற்றுகுள்ளே
கிறுக்கன் என்றொரு பேரும் கிடைத்தது
வீடுகுள்ளே

காதலே ஒரு வகை ஞாபக மறதி
கண்ணில் நடப்பதும் மறந்திடுமே
வௌவ்வாலை போல நம் உலகம் மாறி
தலை கீழாக தொங்கிடுமே

உடல் கொதித்ததே
உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்கு பிடித்ததடா
எடை குறையுதே தூகம் தொலையுதே
அய்யோ பைத்தியமே பிடிக்கிறதே

===

என் பேர் கேட்டால் உன் பேர் சொன்னேன்
பதட்டத்திலே
பக்கது வீட்டில் கோலம் போட்டேன் குழப்பதிலே
காதல் கவிதை வாங்கி படித்தேன்
கிரக்கத்திலே
ஓ குட்டி பூனைக்கு முத்தம் குடுத்தேன் மயக்கதிலே

காதலும் ஒரு வகை போதை தானே
உள்ளுக்குள் வெறி ஏற்றும் பேய் போல
ஏன் இந்த தொல்லை என்று தள்ளி போனால்
புன்னகை செய்து கொஞ்சும் தாய் போல

உடல் கொதித்ததே
உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்கு பிடித்ததடா
எடை குறைந்ததே
தூகம் தொலைந்ததே
அய்யோ பைத்தியமே பிடித்ததடா

மின்னல்கள் கூத்தாடும் மழை காலம்
வீதியில் எங்கெங்கும் குடை கோலம்
என் முன்னே நீ வந்தாய் கொஞ்ச நேரம்
என் விழி எங்கும் பூக்காலம்

உடல் கொதித்ததே
உயிர் மிதந்ததே
அய்யோ அது எனக்கு பிடித்ததடா
எடை குறைந்ததே
தூகம் தொலைந்ததே
அய்யோ பைத்தியமே பிடித்ததடா

ரிதம் - நதியே நதியே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ

சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே

சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே
வளைவுகள் அழகு, உங்கள் வளைவுகள் அழகு
ஹோ.. மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல்
நதிகளின் குணமே, அது நங்கையின் குணமே

சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே

சிறு நதிகளே நதியிடும் கரைகளே
கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே


தினம் மோதும் கரை தோறும்,ஆட ஆறும் இசை பாடும்...
கங்கை வரும், யமுனை வரும்,வைகை வரும், பொருணை வரும்...

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி
பசுவினிலே பாலாகும் நீரே
தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி
சேயருகே தாயாகும் பெண்ணே
பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்
நீர் நினைத்தால் பெண் நினைத்தால்
கரைகள் யாவும் கரைந்து போக கூடும்

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

ரிதம் - காற்றே என் வாசல்

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

கார்காலம் அழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்
தாவணி குடை பிடிப்பாயா

அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா

நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா

பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க

பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க

பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல
என் பெண்மை திறந்து நிற்கிறதே

திறக்காத சிப்பி என்னை திறந்துகொள்ள சொல்கிறதா
என் நெஞ்சம் அரண்டு நிற்கிறதே

நான் சிறு குழந்தை என இருந்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன்
என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா

கட்டிலிடும் வயதில் தொட்டிலிட சொன்னால் சரியா சரியா

கட்டிலிடும் வயதில் தொட்டிலிட சொன்னால் சரியா சரியா

கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

கன்னத்தில் முத்தமிட்டால் - வெள்ளை பூக்கள்

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே
தாயின் கத கதப்பில்
உலகம் விடியட்டுமே
பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே
குழந்தை விழிக்கட்டுமே
தாயின் கத கதப்பில்
உலகம் விடியட்டுமே
பிள்ளையின் சிறுமுக சிரிப்பில்

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே

காற்றின் பேரிசையும்
மழை பாடும் பாடல்களும் ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ
கோடி கீர்த்தனையும் கவி கோர்த்த வார்தைகளும் துளி கண்ணீர் போல்
அர்த்தம் தருமோ

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே

எங்கு சிறு குழந்தை தன் கைகள் நீட்டிடுமோ
அங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே
எங்கு மனித ஈனம் போர் ஓய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவதோ வெள்ளை குயிலே

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே
மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுகவே
மலரே சோம்பல் முறித்து எழுகவே

வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே மலர்கவே
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே விடிகவே

காதலுக்கு மரியாதை - என்னை தாலாட்ட

என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே

என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ

பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவும் பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயரில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்
நான் கேட்கும் பதில் இன்று வாராதா
நான் தூங்க மடி ஒன்று தாராதா
தாகங்கள் தாபங்கள் தீராதா
தாளங்கள் ராகங்கள் சேராதா
வழியோரம் விழி வைக்கிறேன்

எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலைக்கு நீரூற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்

என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே

என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ

காதலன் - என்னவளே அடி

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன் - உந்தன்
கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்
கண்டதும் கண்டு கொண்டேன் - இன்று
கழுத்து வரை இன்று காதல் வந்து இரு
கண்விழி பிதுங்கி நின்றேன்

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று
வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டையும்
உருலுதடி
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால் ஒரு
நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல் ஒரு கலக்கமும்
தோன்றுதடி - இது
சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி - நான்
வாழ்வதும் விடைகொண்டு போவதும் உந்தன்
வார்த்தையில் உள்ளதடி...

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

கோகிலமே நீ குரல் கொடுத்தால் உனைக் கும்பிட்டுக்
கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டு உந்தன் கூங்தலில்
மீன் பிடிப்பேன்
வென்னிலவே உனைத் தூங்கவைக்க உந்தன் விரலுக்கு
சொடுக்கெடுப்பேன்
வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி
அனுப்பிவைப்பேன் - என்
காதலின் தேவையை காதுக்குள் ஓதிவைப்பேன் - உன்
காலடி எழுதிய கோலங்கள் புதுக்
கவிதைகள் என்றுரைப்பேன்...

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன் - உந்தன்
கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்
கண்டதும் கண்டு கொண்டேன் - இன்று
கழுத்து வரை எந்தன் காதல் வந்து இரு
கண்விழி பிதுங்கி நின்றேன்

கலைஞன் - எந்தன் நெஞ்சில்

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா

இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீ தானா வா

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா

பனியில் நனையும் மார்கழிப் பூவே
எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே
உனக்கென பிறந்தவள் நானா
நிலவுக்கு துணை இந்த வானா
வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்
வந்தாயே உறவாகா இன்னாள்

எந்தன் நெஞ்சில் ஹோ

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா

இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீ தானா வா

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா

சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்
நகங்கள் பதிந்தால் காயங்கள் தோன்றும்
உதடுகள் உரசிடத்தானே
வலிகளும் குறைந்திடும் மானே
நான் சூடும் நூலாடை போலே
நீ ஆடு பூமேனி மேலே

எந்தன் நெஞ்சில் ஹோ

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா

இசையின் ஸ்வரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீ தானா வா

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா

சாமுராய் - ஆகாய சூரியனை

ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்

ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்

இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
கொடி தான் உன் தேகம் முற்றும் சுற்றிக் கொண்ட கொடி தான்
என் எண்ணம் என்னவோ
கிளி தான் உன்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளி தான் உன்னை கொஞ்சும் எண்ணமோ

ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்

நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
அடியே என் தேகம் முற்றும் சுற்றிக் கொண்ட கொடியே
உன் எண்ணம் என்னவோ
சகியே என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளியே என்னை கொல்லும் எண்ணமோ

காதல் பந்தியில் நாமே உணவு தான் உண்ணும் பொருளே உன்னை உண்ணும் விந்தை இங்கு தான்

காதல் பார்வையில் பூமி வேறு தான் மார்கழி வெயிலும் சித்திரை குளிரும் மாறுதல் இங்கே தான்

உன் குளிருக்கு இதமாய் என்னை அடிக்கடி கொளுத்து
உன் வெயிலுக்கு சுகமாய் உன் வியர்வையில் நனைத்து

காதல் மறந்தவன் காமம் கடந்தவன் துறவம் துறந்தவன் சொர்க்கம் வந்தது

ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்

என்னை கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய் போரா போரா மலை சென்றாலும் துரத்தி வருவேனே
உன்னை நீங்கினால் எங்கே செல்வது உன் உள்ளங்கை ரேகை குள்ளே ஒளிந்து கொள்வேனே
அடி காதல் வந்தும் ஏன் கண்ணாமூச்சி
நீ கண்டு கண்டு பிடித்தால் பின் காமன் ஆட்சி
கத்தி பறித்து பூவை பறிக்கிறாய் பாரம் குறைந்ததில் ஏதோ நிம்மதி

ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்

இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
கொடி தான் உன் தேகம் முற்றும் சுற்றிக் கொண்ட கொடி தான்
என் எண்ணம் என்னவோ
கிளி தான் உன்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளி தான் உன்னை கொஞ்சும் எண்ணமோ

நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
அடியே என் தேகம் முற்றும் சுற்றிக் கொண்ட கொடியே
உன் எண்ணம் என்னவோ
சகியே என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளியே என்னை கொல்லும் எண்ணமோ