உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Monday, March 29, 2010

கிரீடம் - அக்கம் பக்கம் யாரும் இல்லா

அக்கம் பக்கம் யாரும் இல்லா, பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன் அருகே , நான் வாழ வேண்டும்
என் ஆசை எல்லாம் உன் இருக்கத்திலே,என் ஆயுள் வரை உன் அணைப்பினிலே
வேறென்ன வேண்டும் உலகத்திலே , இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்

அக்கம் பக்கம் யாரும் இல்லா, பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன் அருகே , நான் வாழ வேண்டும்

நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து செய்வேன் அன்பே ஓர் அகராதி
நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல் பார்ப்பேன் தினம் உன் தலை கோதி
காதோரதில் எப்போதுமே உன் மூச்சு காற்றின் வெப்பம் சுமைப்பேன்
கையோடுதான் கை கோர்த்து நான் உன் மார்பு சூட்டில் முகம் புதைப்பேன்

வேறென்ன வேண்டும் உலகத்திலே , இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
அக்கம் பக்கம் யாரும் இல்லா, பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன் அருகே , நான் வாழ வேண்டும்

நீயும் நானும் சேரும் முன்னே நிழல் ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல் நெஞ்சும் தினம் விண்ணில் மிதக்கிறதே
உன்னால் இன்று பெண்ணாகவே நான் பிறந்ததில் அர்த்தங்கள் அறிந்து கொண்டேன்!
உன் தீண்டழில் என் தேகத்தில் புது ஜன்னல்கள் திறப்பதை தெரிந்து கொண்டேன்

வேறென்ன வேண்டும் உலகத்திலே , இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம்
வாழ்ந்துவிட்டேன்

No comments:

Post a Comment