உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Monday, March 29, 2010

அழகிய தமிழ் மகன் - கேளாமல் கையிலே

கேளாமல் கையிலே வந்தாயே காதலே
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை
மீண்டும் இந்த ஞாபகம் தூண்ட
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை
மீண்டும் இந்த ஞாபகம் தூண்ட
என்னை உன்னை எண்ணி யாரோ
எழுதியது போலவே தோன்ற....
என்னை உன்னை எண்ணி யாரோ
எழுதியது போலவே தோன்ற....

கேளாமல் கையிலே வந்தாயே காதலே
என் பேரை கூறிடும் உன்பேரும் கோகிலம்

கோகிலம்.. கோகிலம் ... கோகிலம்..
நெஞ்சிலே காதலின் கால்தடம்..
கேளாமல் கையிலே வந்தாயே.. காதலே
என் ராமன் நீயெனில் உன்கையில் நான் அணில்

இனிமேல் இனிமேல் இந்த நானும் நானில்லை
போய்வா போய்வா என்றே எனக்கே விடைகள் தந்தேன்

மெலிதாய் மெலிதாய் நானிருந்தேன்
மிக எளிதாய் எங்கும் நடந்தேன்
இன்று உனை நெஞ்சில் சுமந்தேன்
நான் நடந்தேன்.. நடந்தும் விழுந்தேன்

கூந்தலென்னும் ஏணி ஏறி
முத்தமிட ஆசைகள் உண்டு

நெற்றி மூக்கு உதடு என்றே
இறங்கி வர படிகளும் உண்டு

கேளாமல் கையிலே வந்தாயே காதலே
என் பேரை கூறிடும் உன்பேரும் கோகிலம்

பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே
பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே
ஏதோ நடக்கின்றதே ...?...
பார்த்தும் பாராமலே போகும் மேகங்களே
கண்ணை கண்ணை சிமிட்டும் நொடியில்
உன் உருவம் மறையும் மறையும்
அதனால் இமைகள் வேண்டாம் என்பேன்

பார்வை ஒன்றால் உனை அள்ளி
என் கண்ணின் சிறையில் அடைப்பேன்
அதில் நிரந்தரமாய் நீ இருக்க
இமைகள் வேண்டும் என்பேன்

மேற்கு திசையை நோக்கி நடந்தால்
இரவு கொஞ்சம் சீக்கிரம் வருமா

தூங்கும் தேவை ஏதுமின்றி
கனவுகளும் கைகளில் விழுமா

கேளாமல் கையிலே வந்தாயே.. காதலே
என் ராமன் நீயெனில் உன்கையில் நான் அணில்

கோகிலம்.. கோகிலம் ... கோகிலம்
நெஞ்சிலே காதலின் கால்தடம்

கோகிலம்.. கோகிலம் ... கோகிலம்
நெஞ்சிலே காதலின் கால்தடம்

No comments:

Post a Comment