உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Monday, March 29, 2010

மொழி - காற்றின் மொழி...

காற்றின் மொழி...ஒளியா? இசையா?
பூவின் மொழி....நிறம்மா? மனமா?
கடலின் மொழி...அலையா? நுறையா?
காதல் மொழி...விழியா? இதழா?

இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்
மனிதரின் மொழிகள் தேவை-இல்லை
இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்
மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை

காற்றின் மொழி...ஒளியா? இசையா?
பூவின் மொழி....நிறம்மா? மனமா?

காற்றே வீசும் போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழிகள் கிடையாது
பேசும் வார்த்தை போல...மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை....கடவுள் அறியது

உலவி திரியும் காற்றிருக்கு....உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழி-எல்லாம்... சப்த கூட்டில் அடங்காது

இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்
மனிதரின் மொழிகள் தேவை-இல்லை
இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்
மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை


காற்றின் மொழி...


வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிரமாய் வெளியாகும்
உண்மை ஊமை ஆனால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமை ஆனால் நாணம் மொழியாகும்

ஓசை தூங்கும் ஜாமத்தில்...குச்சி மீன்கள் மொழியாகும்
ஆசை தூங்கும் இதயத்தில்...அசைவு கூட மொழியாகும்

இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்
மனிதரின் மொழிகள் தேவை-இல்லை
இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்
மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை

காற்றின் மொழி...ஒளியா? இசையா?
பூவின் மொழி....நிறம்மா? மனமா?
கடலின் மொழி...அலையா? நுறையா?
காதல் மொழி...விழியா? இதழா?

இயற்கையின் மொழிகள் புரிந்து விடில்
மனிதரின் மொழிகள் தேவை-இல்லை
இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்
மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை

காற்றின் மொழி...

1 comment:

  1. பாடலின் வரிகளும் அருமை!.. இசையும் அருமை!!

    ReplyDelete