உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Monday, March 29, 2010

புன்னகை மன்னன் - ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னைக் கொடுத்தேன்
நீதானே புன்னகை மன்னன்
உன் ராணி நானே
பண்பாடும் பாடகன் நீயே உன் ராகம் நானே --- ஏதேதோ

சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்
உனைப் பார்ப்பதால் தானே உயிர் வாழ்கிறேன்
தூக்கம் விழிக்கிறேன் பூக்கள் வளர்க்கிறேன்
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
பதில் என்ன கூறு பூவும் நானும் வேறு--- ஏதேதோ

குலதெய்வமெ எந்தன் குறை தீர்க்கவா
கை நீட்டினேன் என்னைக் கரை சேர்க்கவா
நீயே அனைக்க வா தீயை அனைக்க வா
நீ பார்க்கும்பொது பனியாகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது வந்த பொதும் இந்த அன்பு போதும் --- ஏதேதோ

No comments:

Post a Comment