உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Tuesday, March 30, 2010

சாமுராய் - ஆகாய சூரியனை

ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்

ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்

இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
கொடி தான் உன் தேகம் முற்றும் சுற்றிக் கொண்ட கொடி தான்
என் எண்ணம் என்னவோ
கிளி தான் உன்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளி தான் உன்னை கொஞ்சும் எண்ணமோ

ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்

நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
அடியே என் தேகம் முற்றும் சுற்றிக் கொண்ட கொடியே
உன் எண்ணம் என்னவோ
சகியே என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளியே என்னை கொல்லும் எண்ணமோ

காதல் பந்தியில் நாமே உணவு தான் உண்ணும் பொருளே உன்னை உண்ணும் விந்தை இங்கு தான்

காதல் பார்வையில் பூமி வேறு தான் மார்கழி வெயிலும் சித்திரை குளிரும் மாறுதல் இங்கே தான்

உன் குளிருக்கு இதமாய் என்னை அடிக்கடி கொளுத்து
உன் வெயிலுக்கு சுகமாய் உன் வியர்வையில் நனைத்து

காதல் மறந்தவன் காமம் கடந்தவன் துறவம் துறந்தவன் சொர்க்கம் வந்தது

ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்

என்னை கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய் போரா போரா மலை சென்றாலும் துரத்தி வருவேனே
உன்னை நீங்கினால் எங்கே செல்வது உன் உள்ளங்கை ரேகை குள்ளே ஒளிந்து கொள்வேனே
அடி காதல் வந்தும் ஏன் கண்ணாமூச்சி
நீ கண்டு கண்டு பிடித்தால் பின் காமன் ஆட்சி
கத்தி பறித்து பூவை பறிக்கிறாய் பாரம் குறைந்ததில் ஏதோ நிம்மதி

ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்

இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
கொடி தான் உன் தேகம் முற்றும் சுற்றிக் கொண்ட கொடி தான்
என் எண்ணம் என்னவோ
கிளி தான் உன்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளி தான் உன்னை கொஞ்சும் எண்ணமோ

நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
அடியே என் தேகம் முற்றும் சுற்றிக் கொண்ட கொடியே
உன் எண்ணம் என்னவோ
சகியே என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளியே என்னை கொல்லும் எண்ணமோ

No comments:

Post a Comment