உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Monday, March 29, 2010

மனசெல்லாம் - நீ தூங்கும் நேரத்தில்

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
கண்மணியே கண்மணியே
கண்ணுக்குள் கண்ணாக என்றென்றும் நீ வேண்டும்
என் உயிரே என் உயிரே

பூவொன்று உன் மீது
விழுந்தாலும் தாங்காது
என் நெஞ்சம் புண்ணாய் போகுமே

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
கண்மணியே கண்மணியே

ஆஆ...

மடி மீது நீயிருந்தால்
சொர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ?
நொடி நேரம் பிரிந்தாலும்
காலங்களும் நின்று போகாதோ?
ஒரு மூச்சு இரு தேகம்
வாழ்வது நாம் இன்றி வேராரோ?
நாம் காதல் வெள்ளத்தில்
நடுவே நாம் இருந்தாலும்
என் நெஞ்சம் தாகம் கொள்ளுதே ஓ...

(நீ தூங்கும் நேரத்தில்)

கண்ணொடும் நெஞ்சொடும் உயிராலே உன்னை மூடி கொண்டேனே
கனவொடும் நினைவொடும் நீங்காமல் உன்னருகில் வாழ்ந்தேனே
மதி பறிக்கும் மதி முகமே
உன் ஒளி அலை தன்னில் நானிருப்பேன்
எங்கே நீ சென்றாலும் அங்கே நான் வருவேனே
மன செல்லாம் நீதான் நீதானே ஓ...

நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
கண்மணியே கண்மணியே
பூவொன்று உன் மீது
விழுந்தாலும் தாங்காது
என் நெஞ்சம் புண்ணாய் போஆகுமே
நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது
கண்மணியே கண்மணியே
கண்மணியே கண்மணியே
என் உயிரே என் உயிரே

No comments:

Post a Comment