உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Monday, March 29, 2010

விண்ணை தாண்டி வருவாயா - மன்னிப்பாயா

கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடிதிருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் என் கடலிடமே

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா

கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

மேலும் மேலும்
உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஒ ஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீ தான்
வரம் கிடைத்தும் நான் தவற விட்டேன்
மன்னிப்பாயா அன்பே

காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீ தான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமால்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்

அன்பிற்கும் உண்டோ அடைகுந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்றும் உரியர் பிறர்க்கு

புலம்பல் எனசசென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டேன்

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
போவாயோ கானல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமால்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா

கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே
எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும்
உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஒ ஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

No comments:

Post a Comment