நான் பாடும் மௌன ராகம்
என் காதல் ராணி இன்னும்
நான் பாடும் மௌன ராகம் கேட்க வில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்க வில்லையா
கண்ணீரில் உன்னை தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்
நான் பாடும் மௌன ராகம் கேட்க வில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்க வில்லையா
---
உன்னை கண்டு தென்றலும் நின்று போனதுண்டு
உன்னை காண வென்னிலா வந்து போவதுண்டு
ஏன் தேவி இன்று நீ என்னை கொல்கிறாய்
முள் மீது ஏனடி தூங்க சொல்கிறாய்
உன்னை தேடி தேடியே எந்தன் ஆவி போனது
கூடு தானே இங்கு பாடுது
கூடு இன்று குயிலைதானே தேடுது
---
நான் பாடும் மௌன ராகம் கேட்க வில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்க வில்லையா
---
கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்
வாங்கி வந்து பின்பு தான் சாபம் என்று கண்டேன்
என் சாபம் தீரவே நீயும் இல்லையே
என் சோகம் பாடவே ராகம் இல்லையே
பூவும் வீழ்ந்து காம்பும் என்ன வாழ்வது
காலம் என்னை கேள்வி கேட்குது
கேள்வி இன்று கேலியாகி போனது
---
நான் பாடும் மௌன ராகம் கேட்க வில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்க வில்லையா
கண்ணீரில் உன்னை தேடுகின்றேன்
என்னோடு நானே பாடுகின்றேன்
நான் பாடும் மௌன ராகம் கேட்க வில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்க வில்லையா
Sunday, June 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment