உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Sunday, June 6, 2010

உயர்ந்த உள்ளம் - வந்தாள் மகாலக்ஷ்மியே

வந்தாள் மகாலக்ஷ்மியே
என்றும் அவள் ஆட்சியே
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
அடியேனின் குடி வாழ தனம் வாழ குடிதனம் புக...

வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
---
பக்தனின் வீட்டோடு தங்கிவிட்டால்
பண்டிகை நாள் பார்த்து பொங்கலிட்டால்

பக்தனின் வீட்டோடு தங்கிவிட்டால்
பண்டிகை நாள் பார்த்து பொங்கலிட்டால்

காமாக்ஷியோ மீனாக்ஷியோ
அபிராமியோ சிவகாமியோ

அம்பிகை இங்கொரு கன்னிகை என்றொரு
உருவம் எடுத்து உலவி நடந்து...
---
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
---
நண்பா பெண் பாவை கண் வண்ணம்
கள்ளம் இல்லாத பூ வண்ணம்
கண்டேன் சிங்கார கை வண்ணம்
தொட்டால் எல்லாமே பொன் வண்ணம்
பந்தம் சொந்தம் இல்லாமல் வந்தது இங்கொரு வண்ண மயில்
வீடு வாசல் எல்லாமே மின்னுது மின்னுது புன்னகையில்
மயங்கினேன் சபாஷ்
---
என் வழி நேராக ஆக்கி வைத்தால்
என்னையும் சீராக மாறி வைத்தால்

என் வழி நேராக ஆக்கி வைத்தால்
என்னையும் சீராக மாறி வைத்தால்

தெய்வீகமே பெண்ணானதோ
நான் காணவே தேர் வந்ததோ

மங்கலம் பொன்கிடும் மந்திர புன்னகை
இதழில் வழிய இனிமை விளைய
---
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே
அடியேனின் குடி வாழ தனம் வாழ குடிதனம் புக...

வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில்
என்றும் அவள் ஆட்சியே

No comments:

Post a Comment