உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Sunday, June 6, 2010

வெற்றி விழா - பூங்காற்று உன் பேர்

பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று

நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று

தீர்த்த கரை ஓரத்திலே

தேன்சிட்டுகள் உள்ளதிலே

கல்யாண வைபோகம்தான்

நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று
--
மூங்கில் காட்டோரம் மைனாக்கள் ரெண்டு
மோக பண் பாடுதே
மேலை காற்றோடு கை சேத்து நாணல்
காதல் கொண்டாடுதே

ஆலம் விழுதோடு கிளி கூட்டம் ஆடும்
காலம் இதுவல்லவா
ஈர சிறகோடு இசை பாடி திரியும்
நேரம் இதுவல்லவா

ஏதேதோ எண்ணம் தோன்ற ஏகாந்தம் இங்கே

நான் காணும் வண்ணம் யாவும் நீதானே அன்பே

வண்ணம் மாறாமல் மீண்டும் மீண்டும்

ஆசைகள் ஈடேர கூடும்
---
பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று
---
ஜென்ம ஜென்மங்கள் ஆனாலும் என்ன
ஜீவன் உன்னோடுதான்
தேவி ஸ்ரிதேவி பூவாரம் சூட
தேவன் என்னோடுதான்

நீல வான் கூட நிறம் மாறி போகும்
நேசம் நிறம் மாறுமா
கால காலங்கள் போனாலும் என்ன
காதல் தடம் மாறுமா

ஓயாமல் உன்னை கொஞ்சும்
ஊதாபூ வண்ணம்

ராஜாவின் முத்தம் கொள்ளும்
ரோஜாபூ கன்னம்

வாடை தீண்டாத வாழை தோட்டம்

ஆனந்த எல்லைகள் காட்டும்
---
பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று

நீரூற்று என் தோள் கொஞ்ச பார்த்தேனே இன்று

தீர்த்த கரை ஓரத்திலே

தேன்சிட்டுகள் உள்ளதிலே

கல்யாண வைபோகம்தான்
பூங்காற்று உன் பேர் சொல்ல கேட்டேனே இன்று

No comments:

Post a Comment