உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Thursday, June 10, 2010

துள்ளாத மனமும் துள்ளும் - தொடு தொடுவெனவே

தொடு தொடுவெனவே, வானவில் என்னை,
தூரத்தில் அழைக்கின்ற நேரம்

விடு விடுவெனவே, வாலிப மனது,
விண்வெளி விண்வெளி ஏறும்

மன்னவா ஒரு கோயில் போல், இந்த மாளிகை எதற்காக?

தேவியே, என் ஜீவனே, இந்த ஆலயம் உனக்காக,

வானில் ஒரு புயல் மழை வந்தால்,
அழகே, என்னை எங்கணம் காப்பாய் ?

கண்ணே, உன்னை என் கண்ணில் வைத்து,
இமைகள் என்னும் கதவுகள் அடைப்பேன்

சாத்தியம் ஆகுமா?

நான் சத்தியம் செய்யவா?

தொடு தொடுவெனவே, வானவில் என்னை,
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
---
இந்த பூமியே தீர்ந்து போய்விடில், என்னை எங்கு சேர்ப்பாய் ?

நட்சத்திரங்களை தூசி தட்டி, நான் நல்ல வீடு செய்வேன்,

நட்சத்திரங்களின் சூட்டில் நான், உருகி போய்விடில் என் செய்வாய்?

உருகிய துளிகளை ஒன்றாக்கி, என் உயிர் தந்தே உயிர் தருவேன்,

ஹே ராஜா, இது மெய்தானா?

ஏய் பெண்ணே,
தினம் நீ செல்லும் பாதையில் முள்ளிருந்தால்,
நான் பாய் விரிப்பேன், என்னை,

நான் நம்புகிறேன் உன்னை,
---
தொடு தொடுவெனவே, வானவில் என்னை,
தூரத்தில் அழைக்கின்ற நேரம்

விடு விடுவெனவே, வாலிப மனது,
விண்வெளி விண்வெளி ஏறும்
---
நீச்சல் குளமிருக்க, நீரும் இல்லை, இதில் எங்கு நீச்சல் அடிக்க?

அக்தர் கொண்டு,அதை நிரப்பவேண்டும்,இந்த அல்லி-ராணி குளிக்க

இந்த ரீதியில், அன்பு செய்தால், என்ன வாகுமோ என் பாடு?

காற்று வந்து உன் குழல் கலைத்தால்,கைது செய்வதென ஏற்பாடு

பெண் நெஞ்சை, அன்பால் வென்றாய்

ஹே ராணி, அந்த இந்திரலோகத்தில் நான் கொண்டு தருவேன்,
நாள் ஒரு பூ வீதம்,

உன் அன்பு அது போதும்,
---
தொடு தொடுவெனவே, வானவில் என்னை,
தூரத்தில் அழைக்கின்ற நேரம்

விடு விடுவெனவே, வாலிப மனது,
விண்வெளி விண்வெளி ஏறும்

மன்னவா ஒரு கோயில் போல், இந்த மாளிகை எதற்காக?

தேவியே, என் ஜீவனே, இந்த ஆலயம் உனக்காக,

வானில் ஒரு புயல் மழை வந்தால்,
அழகே, என்னை எங்கணம் காப்பாய் ?

கண்ணே, உன்னை என் கண்ணில் வைத்து,
இமைகள் என்னும் கதவுகள் அடைப்பேன்

சாத்தியம் ஆகுமா?
நான் சத்தியம் செய்யவா?
---

No comments:

Post a Comment