உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Thursday, June 10, 2010

துள்ளாத மனமும் துள்ளும் - இருபது கோடி நிலவுகள்

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ

நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே -
ஆனால்
கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
---
தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன
வழியில் உந்தன் பாதம் கண்டு வணக்கம் சொல்லவோ
தேன் மிதக்கும் உதடுகள் சேர்ந்திருப்பதென்ன
ஒன்றை ஒன்று முத்தமிட்டு இன்பம் கொள்ளவோ
மானிடப் பிறவி என்னடி மதிப்பு
உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு
---
நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே -
ஆனால்
கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
---
ஜூலை மாதம் பூக்கும் கொன்றைப் பூக்கள் போல
சேலை கொண்ட பெண்ணின் அங்கம் தோற்றம் காட்டுதே
தாஜ்மகாலின் வண்ணம் மாறக்கூடும் பெண்ணே
மின்னும் கன்னம் வண்ணம் கூட்டுதே
நிறமுள்ள மலர்கள் சோலைக்குப் பெருமை
நீ உள்ள ஊரில் வசிப்பது பெருமை
---
நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே -
ஆனால்
கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ
நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ

நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே -
ஆனால்
கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே

No comments:

Post a Comment