உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Friday, June 11, 2010

கண்ட நாள் முதல் - மேற்கே மேற்கே

லை லை லை லை லை லை லை லாலகி லை

மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே

சுடும் வெய்யில் கோடை காலம்
கடும் பனி வாடை காலம்
இரண்டுக்கும் நடுவே ஏதும்
காலம் உள்ளதா?
இலை உதிர் காலம் தீர்ந்து
எழுந்திடும் மண்ணின் வாசம்
முதல் மழை காலம் என்றே
நெஞ்சம் சொல்லுதே

ஓ மின்னலும் மின்னலும்
நேற்று வரை பிரிந்தது ஏனோ
பின்னலாய் பின்னலாய்
இன்றுடன் பிணைந்திட தானோ
லை லை லை லை லை லால லை லை லை
மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே
---
ஓ கோபம் கொள்ளும் நேரம்
வானம் எல்லாம் மேகம்
காணாமலே போகும் ஒரே நிலா
ஓ கோபம் தீரும் நேரம்
மேகம் இல்லா வானம்
பௌர்ணமியாய் தோன்றும் அதே நிலா

இனி எதிரிகள் என்றே எவருமில்லை
பூக்களை விரும்பா வேர்களில்லை
நதியை வீழ்த்தும் நாணல் இல்லையே
இது நீரின் தோளில் கை போடும்
ஒரு சின்ன தீயின் கதையாகும்
திரைகள் இனிமேல் தேவை இல்லையே
---
மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே
லை லை லை லை லை லை லை லை லை லை லை...
---
வாசல் கதவை யாரோ
தட்டும் ஓசை கேட்டால்
நீதானென்று பார்தேனடி சகி
பெண்கள் கூட்டம் வந்தால்
எங்கே நீயும் என்றே
இப்பொதெல்லாம் தேடும் எந்தன் விழி

இனி கவிதையில் கைகள் நனைந்திடுமோ
காற்றே சிறகாய் விரிந்திடுமோ
நிலவின் முதுகை தீண்டும் வேகமோ
அட,தேவைகள் இல்லை என்றாலும்
வாய் உதவிகள் கேடு மன்றாடும்
மாட்டேன் என நீ சொன்னால் தாங்குமோ
---
மேற்கே மேற்கே மேற்கே தான்
சூரியன்கள் உதித்திடுமே
லை லை லை லை லை லை லை லை லை லை லை...
ஓ மின்னலும் மின்னலும்
நேற்று வரை பிரிந்தது ஏனோ
பின்னலாய் பின்னலாய்
இன்றுடன் பிணைந்திட தானோ

No comments:

Post a Comment