உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Wednesday, March 31, 2010

டிஷ்யூம் - நெஞ்சாங்கூட்டில்

ஹேய் !
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் - பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்
கட்டி போட்டு காதல் செய்கிறாய் - முதுகில்
கட்டறெம்பு போலே உருகிறாய்
காதல் தானே இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிறுத்திவிட்டால்
நெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்
இன்னும் பூமுகம் மறக்கவில்லை

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் - பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்

ஹேய் !
விண்ணை துடைக்கின்ற முகிலை, வெள்ளி நிலவை,
மஞ்சள் நட்ஷத்திரத்தை..
என்னைத்தேடி மண்ணில் வரவழைத்து
உன்னை காதலிப்பதை உரைப்பேன்
இன்று பிறக்கின்ற பூவுக்கும், சிறு புல்லுக்கும்,
காதல் உரைத்துமுடிப்பேன்..
உள்ளம் காதலிக்கும் உனக்கு மட்டும்
இன்னும் சொல்லவில்லையே இல்லையே..
லட்சம் பல லட்சம் என்று
தாய்மொழியில் சொல்லிருக்க
ஒத்தச் சொல்லு சிக்கவில்லை எதனாலே ?
பந்திவெச்ச வீட்டுக்காரி பாத்திரத்தை கழுவிவிட்டு பட்டினியாய்
கிடப்பாளே அது போல...!!!

நெஞ்சாங்கூட்டில்..நெஞ்சாங்கூட்டில்..
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் - பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்


சின்ன சின்ன செல்ல குரும்பும், சீனி சிரிப்பும்,
என்னை சீரழிக்குதே..
விரு விருவென வளரும் பழம்
எந்தன் விரதங்களை வெல்லுதே
உன்னை கரம் பற்றி இழுத்து, வளை உடைத்து,
காதல் சொல்லிடச் சொல்லுதே..
வெக்கம் இரு பக்கம் மீசை முளைத்து என்னை
குத்தி குத்தியே கொல்லுதே..
காதல் எந்தன் வீதி வழி
கையை வீசி வந்த பின்னும்
கால் கடுக்க காத்துருக்கேன் எதனாலே ?
பிப்ரவரி மாதத்துக்கு நாளு ஒன்னு கூடி வர
அந்த நாளும் காத்திருக்கும் அது போல...!!!

நெஞ்சாங்கூட்டில்..நெஞ்சாங்கூட்டில்..
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் - பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்

காதல் தானே இது காதல் தானே
உன்னை நினைப்பதை நிருத்திவிட்டால்
னெஞ்சு ஏனடி துடிக்கவில்லை
எண்ணம் யாவையும் அழித்துவிட்டேன்
இன்னும் பூமுகம் மறக்கவில்லை

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் - பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் - பெண்ணே
நெற்றி பொட்டில் தீயை வைக்கிறாய்

2 comments:

  1. 1. ’கு’ந்தலுக்குள் குடியேத்த அல்ல
    ”கூந்தலுக்குள் குடியேத்த”

    2.உன்னை மட்டும் சாகும் ’பொது’ தேட சம்மதம்
    பொது அல்ல “போது”

    3. சட்டம் ’மீராம்மா’ அல்ல “மீறம்மா”

    4.காதல் கொண்ட ’பொது’ தன்னை நேரில் பார்க்கிறேன்

    பொது அல்ல “போது”

    ReplyDelete
  2. சின்ன சின்ன செல்ல குரும்பும்,

    குரும்பும் அல்ல
    குறும்பும்

    ReplyDelete