உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Saturday, June 5, 2010

மே மாதம் - மின்னலே நீ வந்ததேனடி

மின்னலே நீ வந்ததேனடி - என்
கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துபோன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே

மின்னலே நீ வந்ததேனடி - என்
கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துபோன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே

கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே - உன்
கைரேகை ஒன்று மட்டும் நினைவுச்சின்னமே
கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே - உன்
கைரேகை ஒன்று மட்டும் நினைவுச்சின்னமே
கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே - இங்கு
சிதறிப்போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன் - உன்
காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

மின்னலே நீ வந்ததேனடி - என்
கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துபோன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே

பால்மழைக்குக் காத்திருக்கும் பூமி இல்லையா - ஒரு
பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமி இல்லையா
பால்மழைக்குக் காத்திருக்கும் பூமி இல்லையா - ஒரு
பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமி இல்லையா
வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞர் இல்லையா - நான்
காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா
கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன் - உன்
காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

மின்னலே நீ வந்ததேனடி - என்
கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துபோன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னை தேடுதே

No comments:

Post a Comment