உருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்

Mail your Request to tamilpaadalvari@gmail.com

Saturday, June 5, 2010

பொறி - பேருந்தில் நீ

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

விடுமுறை நாட்களில் பள்ளிகூடம்
விளையாட்டு பிள்ளைகளின் செல்ல கோபம்
ஆள் இல்ல நலிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஹ்ம்ம்
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
---
பயணத்தில் வருகிற சிறு தூக்கம்
பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம்

பரிட்சைக்கு படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை

புகைப்படம் எடுகையில் திணரும் புன்னைகை
அன்பே அன்பே நீதானே
அடை மழை நேரத்தில் பருகும் தேநீர்
அன்பே அன்பே நீதானே

ஹ்ம்ம்
தினமும் காலையில் எனது வாசலில்
இருக்கும் நாளிதழ் நீதானே
---
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
--
தாய் மடி தருகிற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறும்சிரிப்பு

தேய் பிறை போல் வரும் நக கணுக்கள்
வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்

செல் போன் சிணுங்கிட கூவுகிற கவனம்
அன்பே அன்பே நீதானே

பிடித்தவர் தருகிற பரிசுப்பொருளும்
அன்பே அன்பே நீதானே

எழுதும் கவிதையில் எழுத்து பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீ தானே
---
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆஹ்..
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

விடுமுறை நாட்களில் பள்ளிகூடம்
விளையாட்டு பிள்ளைகளின் செல்ல கோபம்

ஆள் இல்ல நலிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே

ஆஹ்...
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

No comments:

Post a Comment